செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி | |
---|---|
அமைவிடம் | காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா |
ஆள்கூறுகள் | 13°00′42″N 80°03′38″E / 13.01158°N 80.06063°Eஆள்கூறுகள்: 13°00′42″N 80°03′38″E / 13.01158°N 80.06063°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வெளியேற்றம் | அடையாறு |
வடிநில நாடுகள் | இந்தியா |
செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கின்றது.
இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது. இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.
இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.[1] 85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft) ஆகும்.
படத்தொகுப்பு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ டி.செல்வகுமார் (2 நவம்பர் 2017). "மீண்டும் ஒரு 2015 டிசம்பர் 1 தவிர்க்கப்படுமா? - பாடம் கற்பித்த பெருவெள்ளமும், பாதிப்புகளுக்கான காரணங்களும்". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். 4 நவம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.