முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

இப்போக்கிரட்டீசு உறுதிமொழி என்பது வரலாற்று ரீதியாக மருத்துவர் களால் ஏற்கப்பட்டுவரும் நன்னெறி உறுதிமொழியாகும் . இது மிகவும் பரவலாக அறியப்பட்ட கிரேக்க மருத்துவ நூல்களில் இடம்பெற்ற ஒன்றாகும். இதன் அசல் வடிவத்தில், நோய்களைக் குணப்படுத்தக்கூடிய கடவுளர்கள் என்று கிரேக்கர்கள் நம்பிய வெவ்வேறு கடவுளர்கள், தேவதைகளின் பெயர்களால் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கத்திய உலகில் மருத்துவ நன்நெறிகளின் ஆரம்பகால வெளிப்பாடாக இந்த உறுதிமொழி உள்ளது. இது மருத்துவ தன்நெறிகளின் பல கொள்கைகளை வலியுறுத்துகிறது. அவை இன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. மேலும்...


பாபுர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மிர்சா சாகிருதீன் முகம்மது ஆகும். இவர் தன் தந்தை மற்றும் தாய் வழியே, முறையே தைமூர் மற்றும் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார். இவருக்கு இறப்பிற்குப் பிந்தைய பெயராக பிர்தவ்சு மகானி ('சொர்க்கத்தில் வாழ்பவர்') என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பாபுர் சகதாயி துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டவர் ஆவார். இவர் பெர்கானாப் பள்ளத்தாக்கின் ஆண்டிஜனில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) பிறந்தார்.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

  • தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
  • சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.
  • சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
  • இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

செப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்

விந்தன் (பி. 1916· பி. பி. ஸ்ரீநிவாஸ் (பி. 1930· அசோகமித்திரன் (பி. 1931)
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 21 செப்டம்பர் 23 செப்டம்பர் 24

சிறப்புப் படம்

நேபாளத்தின் காத்மாண்டு மாவட்டத்திலுள்ள கீர்த்திபூர் எனும் இடத்திலுள்ள தௌடாகா ஏரியில் பெரிய நீர்க்காகங்ளும் கருவால் வாத்தும். பெரிய நீர்க்காகம் என அறியப்படும் பறவை நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். கருவால் வாத்து என்பது வாத்து இனத்தைச் சார்ந்த பறவையாகும்.

படம்: Prasan Shrestha
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இருந்து மீள்விக்கப்பட்டது