உரோமைப் பேரரசு என்பது பண்டைய உரோமின்குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலம் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின்நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர். முதலாவது உரோமைப் பேரரசராகச் சீசர் அகத்தசின் பொறுப்பேற்பு முதல், 3ஆம் நூற்றாண்டின் இராணுவ, அரசற்ற நிலை வரை இது உரோமை இத்தாலியை இதன் மாகாணங்களின் முதன்மைப் பகுதியாகக் கொண்டிருந்தது. உரோம் நகரம் இதன் ஒரே தலைநகராக இருந்தது. இப்பேரரசானது பிறகு பல பேரரசர்களால் ஆளப்பட்டது. மேலும்...
மெலோஸ் முற்றுகை என்பது ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே நடந்த போரான பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 416 இல் நடந்த ஒரு முற்றுகைப் போராகும். மெலோஸ் என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவில் உள்ளது. மெலியன்கள் எசுபார்த்தாவுடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் போரில் நடுநிலை வகித்தனர். கி.மு 416 கோடையில் ஏதென்சு மெலோஸ் மீது படையெடுத்தது. மெலியன்கள் சரணடைந்து ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தது. அதற்கு மெலியர்கள் மறுத்துவிட்டனர், எனவே ஏதெனியர்கள் அந்த நகரத்தை முற்றுகையிட்டனர். மேலும்...
வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி அவர்களுக்கு பிரிட்டனில் 1916 - 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய "ரைட் ஹானரபில்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பேரோ லொபேஸ் டி சூசா என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.
இந்தியாவின் உத்தராகண்டு மாநிலத்தில் சாலைச் சுரங்கப்பாதை (படம்) இடிந்து விழுந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு நிலத்தடியில் இருந்து மீட்கப்பட்டனர்.
1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.
உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ள ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தில்விடியல் காட்சி. விடியல் என்பது சூரிய உதயம் அல்லது புலர் எனவும் அழைக்கப்படும் நிகழ்வானது காலையில் அடிவானத்தின் மேலாக ஞாயிறு தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,60,863 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.