உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



பண்டையத் தமிழர் அளவை முறைகள் மிகவும் ஆய்ந்து நோக்கத்தக்கவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று சிலரும் சிறந்த அளவை முறைகளைப் பயன்படுத்தினர் என்றும் பல ஆய்வாவாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாவாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளியினாலான உழக்குகளும் படி என்ற அளவைக்கருவியும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


விக்கித்திட்டங்கள்



தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்
துனைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்



சிறப்புப் படம்



எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு
எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு



கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.
படிம உதவி:
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


செய்திகள்




தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=3433679" இலிருந்து மீள்விக்கப்பட்டது