அடையாறு புற்றுநோய் மையம்
Jump to navigation
Jump to search
![]() | |
அடையாறு புற்றுநோய் மையத்தின் உட்புறம். | |
அமைவிடம் | அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
வகை | சிறப்பு புற்றுநோய் மையம் |
படுக்கைகள் | 423 |
நிறுவல் | 1954 |
வலைத்தளம் | அடையாறு புற்றுநோய் மையம் |
பட்டியல்கள் |
அடையாறு புற்றுநோய் மையம் (Adyar Cancer Institute) இந்தியாவின் சென்னை மாநகரில், அடையாறில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார்.
12-வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் இந்த மருத்துவமனையை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு, நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது நடுவண் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை தேசிய அளவிலான மையமாக தரம் உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்". மாலைமலர் (மார்ச்சு 22, 2013). பார்த்த நாள் மார்ச்சு 22, 2013.