பாம்பாறு (தென் தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பாறு அல்லது சர்ப்ப நதி[1] எனப்படும் இந்த ஆறு, தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்கனூருக்கு அருகே உருவாகிறது. சுமார் 50 கிமீ (31 மைல்) ஓடி திருப்புனவாசல் என்ற புண்ணிய தலத்திற்கு அருகே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]. 1725~1799 இடையே தஞ்சாவூர் மராத்திய ராச்சியத்திற்கும், இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் இடையே எல்லையாக அமைந்தது.[2] தற்சமயம் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சிவகங்கை/ராமநாதபுரம் மாவட்டங்களுக்கிடையே எல்லையாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Rajan, Kodayanallur Vanamamalai Soundara. Concise classified dictionary of Hinduism. Concept Publishing Company. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-857-8. 
  2. Francis, W.. Gazetteer of South India. பக். 234.