புதுக்கோட்டை
புதுக்கோட்டை | |
---|---|
தமிழ்நாட்டின் வரலாற்று ரீதியான நகரம் | |
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் புதுக்கோட்டை முட்டை மாசு | |
அடைபெயர்(கள்): தொண்டைமான் புதுக்கோட்டை, சமஸ்தான அரசு | |
ஆள்கூறுகள்: 10°23′00″N 78°48′00″E / 10.383300°N 78.800100°E | |
Country | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப. |
காவல் துறைக் கண்காணிப்பாளர் | வந்திதா பாண்டே, இ. கா. ப. |
தோற்றுவித்தவர் | இரகுநாத இராய தொண்டைமான் |
பெயர்ச்சூட்டு | இந்நகரத்திலுள்ள புதிய கோட்டையானது மன்னர் இரகுநாத இராய தொண்டைமானால் காட்டப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தான அரசை நிறுவியவர் இவராவார். |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | புதுக்கோட்டை மாநகராட்சி |
• நகரத்தந்தை | திலகவதி செந்தில் (2022-தற்போது) |
• துணை நகரத் தந்தை | லியாகத் அலி (2022–தற்போது) |
• மாநகராட்சி ஆணையர் | நாராயணன் (2024-தற்போது) |
பரப்பளவு | |
• மொத்தம் | 121.26 km2 (46.82 sq mi) |
ஏற்றம் | 116 m (381 ft) |
மக்கள்தொகை (2024) | |
• மொத்தம் | 2,25,500 |
• அடர்த்தி | 1,900/km2 (4,800/sq mi) |
இனம் | புதுக்கோட்டைக்காரன் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 622001 – 622006 |
தொலைபேசி குறியீடு | 04322 |
வாகனப் பதிவு | TN-55 |
பாலின விகிதம் | 1,000 ஆண்களுக்கு 995 பெண்கள் ♂/♀ |
சென்னையிலிருந்து தொலைவு | 390 கி.மீ (242 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 58 கி.மீ (36 மைல்) |
தஞ்சாவூரிலிருந்து தொலைவு | 60 கி.மீ (37 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 111 கி.மீ (69 மைல்) |
இணையதளம் | www |
புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் நிர்வாக மையம் ஆகும். வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் வரலாற்று ரீதியான நகரம் இதுவாகும்.[1] முத்தரையர், சோழர், தொடக்க கால பாண்டியர் மற்றும் தொண்டைமான்கள் ஆகியோரால் பல நேரங்களில் இது ஆளப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரமான சென்னையிலிருந்து தென்மேற்கே 372 கிலோமீட்டர்கள் தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து தென்கிழக்கே 50 கிலோமீட்டர்கள் தொலைவிலும், மதுரையிலிருந்து வடகிழக்கே 108 கிலோமீட்டர்கள் தொலைவிலும் இந்நகரம் அமைந்துள்ளது.
வரலாறு
முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என்றும் பொ.ஊ. 1734-இல் நடைபெற்ற போரில் சந்தா சாகிப்பின் படைகளாலோ அல்லது தஞ்சாவூர் தளபதி ஆனந்தராவாலோ இந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. நகர் பகுதியில் பழைய கோட்டை இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை.பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னரால் புதிதாக இங்கு கோட்டை கட்டப்பட்டதால் புதுக்கோட்டை சமஸ்தனம் என்று பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. 1825-இல் பழைய ஊரை அழித்து புதிய நகரமானது விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1898-இல் மன்னர் மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மகாராணியைச் சந்தித்து திரும்பியதன் நினைவாக நகரில் ஒரு நகரமண்டபமானது வடக்கு இராஜவீதியில் கட்டப்பட்டது.(புதுக்கோட்டை சமஸ்தானத்திற்க்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் கிராமத்தில் சங்ககாலக்கோட்டை இருந்த இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழிகளுடன் கூடிய ஒரே கோட்டை இதுவாகும்) [2] பண்டைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது.[3] தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்) மார்ச் 3, 1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1961 | 50,428 | — |
1971 | 66,384 | +31.6% |
1981 | 87,952 | +32.5% |
1991 | 99,058 | +12.6% |
2001 | 1,09,217 | +10.3% |
2011 | 1,17,630 | +7.7% |
Sources: |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 58,737 ஆண்கள், 58,893 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை சமஸ்தான மக்களின் சராசரி கல்வியறிவு 91.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.53%, பெண்களின் கல்வியறிவு 87.21% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை சமஸ்தானம் மக்கள் தொகையில் 11,762 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, புதுக்கோட்டை சமஸ்தனத்தில் இந்துக்கள் 79.40%, முஸ்லிம்கள் 15.14%, கிறிஸ்தவர்கள் 4.89%, சீக்கியர்கள் 0.02%, 0.04% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.50% பேர்களும் உள்ளனர்.[5]
சுற்றுலா
- அரசு அருங்காட்சியகம் (இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்).
- புதுக்குளம் (இது புதுக்கோட்டை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரிய குளம்)
சிறப்பு திருத்தலம்
- கோகர்ணேஸ்வரர் கோயில்
- ஶ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் - ஆலங்குடி
- ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் - கொத்தமங்கலம்
- ஶ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோவில் - குலமங்கலம்
- ஶ்ரீ மெய்நின்றநாத சுவாமி திருக்கோவில் - நக்கீரமங்களம்(கீரமங்கலம்)
- ஸ்ரீ விடங்கேஸ்வரர் கோவில் (மாங்காடு)
மேற்கோள்கள்
- ↑ Ancient History of Pandyas (1st ed.). Publications Division. 1990 [1981]. ISBN 81-230-0658-6.
- ↑ முனைவர் சுப்பிரமணியன் (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். pp. 171–173.
- ↑ "என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி!". விகடன். Retrieved 25 சனவரி 2015.
- ↑ Conversion of City Corporate Plan to Business Plan for Pudukkottai municipality (PDF) (Report). Commissioner of Municipal Administration, Government of Tamil Nadu. 2008. Archived from the original (PDF) on 2014-03-02. Retrieved 2012-11-16.
- ↑ 5.0 5.1 5.2 "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved நவம்பர் 16, 2019.