ஆத்தூர் (சேலம்)
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஆத்தூர் | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°35′54″N 78°35′51″E / 11.598300°N 78.597400°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | சேலம் | ||||||
வட்டம் | ஆத்தூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
61,793 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10.7 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) • 244 மீட்டர்கள் (801 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/attur/ |
ஆத்தூர் (Attur) என்பது சேலம் மாவட்டத்திலுள்ள உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.
இது வசிஷ்ட நதியின்(வற்றாத ஆறு எனப்பொருள்) தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந்நகரம் 1965 சனவரி நான்காம் தேதி நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. இந்நகரின் வழியாக தேசியநெடுஞ்சாலை 68 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 30 ஆத்தூரையும் முசிறியையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை 157 ஆத்தூரையும் பெரம்பலூரையும் இணைக்கிறது
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 16,371 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,793 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6147 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,797 மற்றும் 384 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.7%, இசுலாமியர்கள் 7.24%, கிறித்தவர்கள் 1.88%, சமணர்கள 0.04% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[1]
வரலாறு
[தொகு]தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு 1886 ஆம் ஆண்டிலேயே பஞ்சாயத்து தோற்றுவிக்கப்பட்டது,இங்கு கல்வராயன் மலை தொடரில் உருவாகும் முட்டல் ஏரி,அருகே அருநூற்று மலை,கருமந்துறை ,முத்துமலை முருகன் கோவில் போன்றவை சிறிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது, இது மிக பழமையான நகரமாக இருந்த போதிலும், அரசும் கால்நடை பூங்கா போன்ற சில வளர்ச்சி திட்ட பணிகள் முன்னெடுத்து பொருளாதார துறையில் அரசின் சிந்தனைக்கு செல்லும் வகையில் இன்னும் பெரிய வளர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. தற்போது கிழங்கு மாவு ,ஜவ்வரிசி,மக்காச் சோளம்,பருத்தி, விதை உற்பத்தி நிறுவனங்கள், மஞ்சள் உற்பத்தி, மற்றும் நல்ல கல்வி நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
பெயர்களும், காரணங்களும்
[தொகு]இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளன.10ஆம் நூற்றாண்டு காலத்தில் சோழர்களுக்கு வானவன் மாதேவி யை பெண் கொடுத்த திருக்கோவிலூர் தலைமையிடமாக கொண்ட தமிழ் குறுநில மன்னனான மலையமான்களின் மிலாடு நாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்ததால் இது மலையமான் ஆத்தூர் எனவும் அழைக்கப்பட்டது .சேலம் மாவட்டக் கையேட்டைத் (Salem District Manual) தயாரித்த "லெபான்" என்ற ஆங்கிலேயர் ஆறு+ஊர் ஆற்றூராகி பின் வழக்கில் ஆத்தூர் என அழைக்கப்பட்டது என்கிறார்.ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளதால் ஆற்று+ஓரம்+ஊர் என்பதிலிருந்து திரிந்து பின்னர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என அவர் கருதுகிறார்.
பிற்காலத்தில் ஆக்கிரமித்த விஜய நகரத்தார் தெலுங்கு அரசர்கள் முக்கிய அலுவல் இடமாக தனியே நரசிங்கபுரத்தை உருவாக்கி இவ்வூருக்கும் "அனந்தகிரி" என்று பெயர்மாற்றம் செய்தும் அழைத்தனர். அனந்தகிரி என்றால் மலைகளுக்கிடையே அமைந்துள்ள ஊர் (கிரி என்றால் மலை) எனப் பொருள் உண்டு.அனந்தகிரி ஆத்தூர்(தெலுங்கு பெயர்)என இரு பெயர்களால் இது அழைக்கப்பட்டதாக ஆங்கிலேயர் தனது குறிப்பில் கூறுகிறார்.
தண்டகாருண்யம்
[தொகு]திரேதாயுகத்தில் தண்டகாருண்யம் என வழங்கப்பட்ட இவ்விடத்தில், வசிஷ்டரும் அவரது சீடர்களும் தவம் செய்தார்கள். அம்முனிவர் வெங்கடேச பெருமாளை நினைத்து தவம் செய்தார். அத்தவத்தைப் பாராட்டி வெங்கடேஸ்வரர் காட்சியளித்தார். ஆகையால் இங்கிருக்கின்ற கோயிலுக்கு "பிரசன்ன வெங்கடேஸ்வரர்" எனப் பெயரும் நதிக்கு வசிஷ்ட நதி எனவும் பெயர் வந்தது.
கல்வெட்டுகள்
[தொகு]- சோழ அரசன் பரகேசரி, கோயிலுக்கு நெல் வழங்கியதாக, இக்கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருக்கிறது.
- இந்த ஊர் வாணக்கோவரையர் வாழ்ந்த மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாகவும் அவர்கள் அருகில் உள்ள தெடாவூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்துள்ளனர் எனவும் மேலும் வாணக்கோவரையருக்கும் கபிலரின் நண்பரான திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் குடிகளுக்கும் திருமண உறவு இருந்தும் வந்துள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன.இதனை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் பெயரைக் குறிக்கும் பழமையான மூன்றாயிரம் வருட தமிழ் எழுத்துக்களோடு கூடிய பானை ஓடுகள் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளன.
- இங்குள்ள கோட்டைக் கோயில் கல்வெட்டுகள், 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில், வந்த தெலுங்கு நாயக்கர் காலத்தில், ஊர் பெயர் மாற்றப்பட்டும் இப்பகுதியை ஆண்ட திம்மராய நாயக்கர் என்பவன் மகதை மண்டலத்திலுள்ள, ஜனநாத வள மண்டலத்தின் ஆத்தூர் கூற்றத்தில், வில்லவராயர் நத்தம் என்ற ஊரை, இறைவனரையூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கராஜ பட்டருக்குத் தானமாக வழங்கினான் எனக்கூறுகிறது.
முடியாட்சி
[தொகு]இந்த ஊரை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, இங்கிருக்கின்ற கோட்டையைக் கட்டினார்கள். கி.பி.1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு ராணுவத் தொகுப்பை இங்கு 1799ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது.
பள்ளி௧ள்
[தொகு]- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் .
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர்
- அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி,அம்பேத்கர் நகர்,ஆத்தூர்
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவாசல்
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவாசல்
- அரசு நடுநிலை பள்ளி நடுமேடு மற்றும் புனித மரியாள் RC Cbsc மேல்நிலைப் பள்ளி.
- தாகூர் மேல்நிலைப் பள்ளி
- தாகூர் (நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளி
- தாகூர் மேல்நிலைப் பள்ளி
- முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்
- சரஸ்வதி ௨யர்நிலைப் பள்ளி, அம்மம்பாளையம், ஆத்தூர் .
- சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் .
- மாருதி மேல்நிலைப் பள்ளி.
- தி கேம்பிரிட்ஜ் பள்ளி
- பாரதியார் பள்ளிகள்
- ராசிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- ஈச்சம் பட்டி மல்லியகரை
அலுவலங்கள்
[தொகு]- தலைமை அஞ்சல் அலுவலகம் , ஆத்தூர் வட்டம் .
- வணிகவரித்துறை அலுவலகம்.
வங்கிகள்
[தொகு]- ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி (வரை எண்-94) (பொது மக்கள் 94 வங்கி என்பர்)
- ஃபெடரல் வங்கி,ஆத்தூர்.
- கரூர் வைசியா வங்கி , ஆத்தூர் .
- கனரா வங்கி, ஆத்தூர்.
- ஐசிஐசிஐ வங்கி , ஆத்தூர் .
- ஆக்சிஸ் வங்கி, ஆத்தூர்.
- பாரத ஸ்டேட் வங்கி (SBI) , ஆத்தூர்.
- இந்தியன் வங்கி, ஆத்தூர்.
- விஜயலட்சுமி வங்கி , ஆத்தூர் .
- ஐ டி பி ஐ வங்கி , ஆத்தூர்
- பேங்க் ஒப் பரோடா , ஆத்தூர்
- தாய்கோ வங்கி , ஆத்தூர்
- கோ-ஆப் சொசைடி(புதுப்பேட்டை) , ஆத்தூர்
- எச் டி எப் சி வங்கி , ஆத்தூர்
- டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் வங்கி, ஆத்தூர்
- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி , ஆத்தூர்
- ஸ்டேட் பேங்க் ஒப் மைசூர் , ஆத்தூர்
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆத்தூர்
வழிபாட்டுத்தலங்கள்
[தொகு]- அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில்.
- 145 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில்.
- ஶ்ரீ திரௌபதி அம்மன் கோவில்.
- பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் ஈச்சம்பட்டி.
- பிரதோசத்திற்கு பெயர் பெற்ற கெங்கவல்லி சிவன் கோவில்.
- புற்று மாரியம்மன் கோவில் நடுவலூர்.
- மகதை மண்டல ஆறகளூர் சிவன் கோயில்.
- தெடாவூர் கூத்தாண்டவர் கோவில்.
- ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில், ஆத்தூர்.
- காட்டுக்கோட்டை முருகன் கோவில்(மலை மீது)
மேற்கோள்கள்
[தொகு]ஊடகக் காட்சியகம்
[தொகு]-
திரௌபதி அம்மன்
-
கனரா வங்கி,ஆத்தூர்.
-
தொடருந்து மறியல்.
-
நகராட்சி ஊழியர்
-
இலவச வழங்கல்
-
பள்ளிக்குழந்தைகள்
-
காவல் நிலைய முகப்பு
வெளிஇணைப்புகள்
[தொகு]- ஆத்தூர் நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2009-01-02 at the வந்தவழி இயந்திரம்