ஏற்காடு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஏற்காட்டில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,869 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,492 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28,118 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. மஞ்சக்குட்டை
  2. ஏற்காடு
  3. நாகலூர்
  4. வேலூர்
  5. வாழவந்தி
  6. செம்மநத்தம்
  7. தலைச்சோலை
  8. வெல்லக்கடை
  9. மாறமங்கலம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. SALEM DISTRICT Census 2011
  4. ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்