உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தாரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தாரப்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் கங்கவள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,308 (2011)

1,590/km2 (4,118/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)
குறியீடுகள்

செந்தாரப்பட்டி (Sentharapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பச்சை மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இப்பேரூராட்சி, சேலத்திலிருந்து 70 கி.மீ.; கங்கவள்ளியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.[4] இதன் மேற்கே தம்மம்பட்டி 4 கீ.மீ.; வடக்கே கங்கவள்ளி 20 கீ.மீ.; தெற்கே துறையூர் 40 கீ.மீ.தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி (மக்களவைத் தொகுதி) க்குட்பட்டதாகும்.

மக்கள் தொகை பரப்பில்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9 ச.கி.மீ. பரப்பும், 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 14,308 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Sentharapatti Town Panchayat
  5. Sentharapatti Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தாரப்பட்டி&oldid=4256935" இலிருந்து மீள்விக்கப்பட்டது