இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 9 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பொருளடக்கம்
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்[தொகு]
- ஆந்திரப் பிரதேசம்
- அருணாச்சல் பிரதேசம்
- அசாம்
- பீகார்
- சத்தீஸ்கர்
- கோவா
- குஜராத்
- அரியானா
- இமாசலப் பிரதேசம்
- ஜார்க்கண்ட்
- கர்நாடகம்
- கேரளம்
- மத்தியப் பிரதேசம்
- மகாராஷ்டிரம்
- மணிப்பூர்
- மேகாலயா
- மிசோரம்
- நாகாலாந்து
- ஒரிசா
- பஞ்சாப்
- ராஜஸ்தான்
- சிக்கிம்
- தமிழ் நாடு
- தெலுங்கானா
- திரிபுரா
- உத்தரப் பிரதேசம்
- உத்தரகண்ட்
- மேற்கு வங்காளம்
யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- சண்டிகர்
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
- தாமன், தியு
- லட்சத்தீவுகள்
- தில்லி
- புதுச்சேரி
- ஜம்மு காஷ்மீர்
- லடாக்
மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும்[தொகு]
# | பெயர் | மக்கள் தொகை | மொழி | தலைநகரம் | மிகப்பெரிய நகரம் (தலைநகரமல்லாதவை) | |
---|---|---|---|---|---|---|
1 | ஆந்திரப் பிரதேசம் | 49,386,799 | தெலுங்கு | ஐதராபாத், விசயவாடா[1] | ||
2 | அருணாச்சலப் பிரதேசம் | 1,091,120 | ஆங்கிலம் | இடாநகர் | ||
3 | அசாம் | 26,655,528 | அசாமியம் | திஸ்பூர் | கவுகாத்தி | |
4 | பீகார் | 82,998,509 | இந்தி,உருது | பாட்னா | ||
5 | சத்தீஸ்கர் | 20,795,956 | இந்தி,சத்தீஸ்கரி | ரெய்ப்பூர் | ||
6 | கோவா | 1,400,000 | கொங்கணி | பனாஜி | ||
7 | குஜராத் | 50,671,017 | குஜராத்தி | காந்தி நகர் | அகமதாபாத் | |
8 | அரியானா | 21,082,989 | அரியான்வி | சண்டிகர் (பகிர்வில்) | பரிதாபாது | |
9 | இமாச்சலப் பிரதேசம் | 6,077,900 | இந்தி | சிம்லா | ||
10 | ஜார்கண்ட் | 26,909,428 | இந்தி | ராஞ்சி | ஜாம்செட்பூர் | |
11 | கர்நாடகா | 52,850,562 | கன்னடம் | பெங்களூரு | ||
12 | கேரளா | 31,841,374 | மலையாளம் | திருவனந்தபுரம் | ||
13 | மத்தியப் பிரதேசம் | 60,385,118 | இந்தி | போபால் | இந்தூர் | |
14 | மகாராஷ்டிரா | 96,752,247 | மராத்தி | மும்பை | ||
15 | மணிப்பூர் | 2,388,634 | மணிப்பூரி | இம்பால் | ||
16 | மேகாலயா | 2,306,069 | காசி, பினார், காரோ மற்றும் ஆங்கிலம் | சில்லாங் | ||
17 | மிசோரம் | 888,573 | மீசோ | ஐஸ்வால் | ||
18 | நாகலாந்து | 1,988,636 | நாகம் | கோஹிமா | திமாப்பூர் | |
19 | ஒரிசா | 36,706,920 | ஒரியா | புபனேஸ்வர் | ||
20 | பஞ்சாப் | 24,289,296 | பஞ்சாபி | சண்டிகர் (shared) | லூதியானா | |
21 | ராஜஸ்தான் | 56,473,122 | ராஜஸ்தானி | ஜெய்ப்பூர் | ||
22 | சிக்கிம் | 540,493 | கான் சீனம் | காங்டாக் | ||
23 | தமிழ்நாடு | 66,396,000 | தமிழ் | சென்னை | கோயம்புத்தூர் | |
24 | தெலுங்கானா | 35,193,978 [2] | தெலுங்கு,உருது | ஐதராபாத் | ||
25 | திரிபுரா | 3,199,203 | வங்காளம் | அகர்தாலா | ||
26 | உத்தரப்பிரதேசம் | 190,891,000 | இந்தி,உருது | லக்னோ | கான்பூர் | |
27 | உத்தரகண்ட் | 8,479,562 | இந்தி | டெஹ்ராடூன் | ||
28 | மேற்கு வங்கம் | 80,221,171 | வங்காளம் | கொல்கத்தா |
# | பெயர் | மக்கள் தொகை | மொழி | தலைநகரம் | மிகப்பெரிய நகரம் (தலைநகரமல்லாதவை) |
---|---|---|---|---|---|
A | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 356,152 | வங்காளம் ,தமிழ், இந்தி | போர்ட் பிளேர் | |
B | சண்டிகர் | 900,635 | பஞ்சாபி | சண்டிகர் | |
C | தாத்ரா மற்றும் நகர் அவேலி | 220,451 | குஜராத்தி | சில்வஸா | |
D | தாமன், தியு | 158,059 | குஜராத்தி | டாமன் | |
E | இலட்சத்தீவுகள் | 60,595 | மலையாளம் | கவரட்டி | ஆண்டுரோட் |
F | தேசிய தலைநகர் பகுதி | 13,782,976 | இந்தி | புது தில்லி | |
G | புதுச்சேரி | 973,829 | தமிழ், பிரான்சியம் | புதுச்சேரி | |
H | சம்மு காசுமீர் | 10,143,700 | கசுமீரியம் | ஸ்ரீநகர் (கோடைகாலம்) ஜம்மு (குளிர்காலம்) |
|
I | லடாக் | 260,000 | லடாக்கி |
இந்திய மாநிலங்களின் உருவாக்கம்[தொகு]
தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பிகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்தராகண்டம் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.
ஆகத்து 2019 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 கொண்டுவரப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லாடக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு ஒற்றிய பகுதிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இது அக்டோபர் 31, 2019 அன்று அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும்.[3]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- வேல்டு-கெஸெடர்.கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)
- மேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)
- ↑ Yes, It's Vijayawada Region. Andhra Pradesh Has New Capital
- ↑ "Population of Telangana" (pdf). Telangana government portal. பார்த்த நாள் 11 June 2014.
- ↑ "Jammu and Kashmir Reorganisation Bill (No. XXIX of) 2019". Parliament of India (5 August 2019). பார்த்த நாள் 22 August 2019.