ஆத்தூர் வட்டம் (சேலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆத்தூர் நகரம் உள்ளது. ஆத்தூர் வட்டம் 59 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது[2]

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

ஆத்தூர் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு, 2011 ஆண்டிற்குப் பின் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் புதிதாக நிறுவப்பட்டது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 430,949 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 217,058 ஆண்களும், 213,891 பெண்களும் உள்ளனர். 112,668 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 71.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.54% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 43652 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 899 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 102,755 மற்றும் 41,444 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.09%, இசுலாமியர்கள்2.09%, கிறித்தவர்கள் 0.7% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
  2. ஆத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. ஆத்தூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்_வட்டம்_(சேலம்)&oldid=3542588" இலிருந்து மீள்விக்கப்பட்டது