பேச்சு:ஆத்தூர் (சேலம்)
இது பேருந்து செல்லும் வழியைப் பற்றி எழுதுவதற்காக பயன்படுத்தலாமே ! ஏனென்றால் , இந்த வழியானது மிகவும் முக்கியமான வழி . - இராஜ்குமார்
- முக்கிய வழி என்பதில் ஐய்யமில்லை. அத்தடத்தில் தான் பெரும்பான்மையான நேரங்களில் பயணிக்கிறேன்.ஆத்தூர்-சேலம் என்பது 51 கி.மீ. தான். ஆனால், அவ்வழி மேற்கே கேரளம் வரையிலும் (கந்தைய கவுண்டர் சாவடி என்ற ஊர் தமிழக எல்லை.), கிழக்கே சென்னை வரையிலும், ஏறத்தாழ 500கி.மீ. உள்ளது. தமிழகத்தின் நடுப்பகுதி என்பதால் பிற தமிழக மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும்(கேரளம், கர்நாடகம்) எளிமையான பிரிவுச்சாலைகளையும் கொண்டுள்ளது.
குடும்பம் (உயிரியல்) என்பதனை ஒத்து இப்பக்கமும், இதனோடு இணைந்தக் கட்டுரையும் ஆத்தூர் (சேலம்) என மாற்றப்பட்டது. மற்றொரு ஆத்தூர் (தூத்துக்குடி). இதுவல்லாமல் இன்னும் 3ஆத்தூர் உள்ளன.முதலில் இந்த ஆத்தூரை விரிவுப்படுத்த வேண்டும்.த* உழவன் 04:57, 9 ஜனவரி 2010 (UTC)
அமைவிடம் தவறாக உள்ளது. நான் மாற்றி கொடுத்த போதும் பழையதையே காட்டுகிறது. இந்த வழுவை சரி செய்ய இயன்றால் நன்று. --குறும்பன் 20:24, 8 ஜூன் 2010 (UTC)