விழுப்புரம்

ஆள்கூறுகள்: 11°56′24″N 79°29′10″E / 11.940100°N 79.486100°E / 11.940100; 79.486100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழுப்புரம்
விழிமா நகரம்
சிறப்பு நிலை நகராட்சி
விழுப்புரம் சந்திப்பு, மாவட்ட நீதிமன்றம் செஞ்சிக் கோட்டை
விழுப்புரம் is located in தமிழ் நாடு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம், தமிழ்நாடு
விழுப்புரம் is located in இந்தியா
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°56′24″N 79°29′10″E / 11.940100°N 79.486100°E / 11.940100; 79.486100
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிதொண்டை நாடு
மாவட்டம்விழுப்புரம்
அரசு
 • வகைசிறப்பு நிலை நகராட்சி்
 • நிர்வாகம்விழுப்புரம் நகராட்சி்
 • மக்களவை உறுப்பினர்து. இரவிக்குமார்
 • சட்டமன்ற உறுப்பினர்ஆர். லட்சுமணன்
 • மாவட்ட ஆட்சியர்சி. பழனி இ.ஆ.ப
 • காவல் கண்காணிப்பாளர்ஜி. ஷஷாங்க் சாய் இ.கா.ப
பரப்பளவு[1]
 • மொத்தம்33.13 km2 (12.79 sq mi)
ஏற்றம்71 m (233 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்96,253
 • அடர்த்தி2,900/km2 (7,500/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு605 601, 605 602,
605 401, 605 103,
605 301
தொலைபேசி குறியீடு+91–4146(STD Code)
வாகனப் பதிவுTN–32
சென்னையிலிருந்து தொலைவு170 கி.மீ (105 மைல்)
பாண்டிச்சேரியிலிருந்து தொலைவு40 கி.மீ (25 மைல்)
சேலத்திலிருந்து தொலைவு178 கி.மீ (110 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு160 கி.மீ (99 மைல்)
பாலின விகிதம்1019 /
எழுத்தறிவு90.16%
காலநிலைதட்பவெப்ப நிலை
(கோப்பென்)
இணையதளம்viluppuram

விழுப்புரம் (Vizhuppuram, ஒலிப்பு) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு 'சிறப்பு நிலை நகராட்சி ' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]

இந்நகரம், திருச்சிசென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை சுமார் 96,253 ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஆய்வின்படி, எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும்.[4]

மாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

  • "சோழர்கள் காலம் வரையில், பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது, விழுப் அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே, 'விழுப்புரம்' என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும் விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்) இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்காரனை, 'விழுப்ராயன் எனும் படைத்தலைவன்' என்று அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
  • 'ஜெயன்கொண்ட சோழ விழுப்பராய நாடாழ்வான்' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாக விளங்கியவன் "ஆதிநாதன் விழுப்பரையன்".[5] அவனை வாழ்த்தி "கரணை விழுப்பராயன் மடல்" (அ) "ஆதிநாதன் வளமடல்" பாடினார் ஜெயங்கொண்டார்.
  • விழுப்பராயன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள், 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், முன்னொரு காலத்தில், 'விழுப்புரம்' வணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும்.
  • ‘எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர்; அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்.
  • ‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார்.
  • ‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மனை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி.

இந்தப் பெருமைகள் ஒருபுறமிருந்தாலும், விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கின்றன;

  • 'பல்லவப் பேரரசன் நிருபதுங்க வர்மன்', இப்பகுதிக்கு, 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்' எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு, தானமாக வழங்கியிருக்கிறான்.
  • 'ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய முதலாம் இராசராசன், அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.
  • விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பராயபுரம்-விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
  • ‘விழுப்பாதராயர் (விழுப்பரையர்)‘ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி, "ஆவணித் திருவிழாவிற் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய (7)ஆம் திருநாளில், அவரிடமிருந்து பொன்னெழுத்தாணியைப் பெற்று, நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்" என்றும், "பாண்டி பதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர்" என இவர்கள் சம்பந்தமாக ஒரு பழமொழியும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. "யார் இந்த விழுப்பராயர்?"பிறந்த குடிக்கே சிறப்பு உண்டாக்கியவர்கள் விழுப்பராயர். வைதீக பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ராஜ சபையில் உத்தியோகத்திற்குப் பேர் போனவர்கள். தஞ்சாவூர் நாயக்க ராஜாக்கள் காலம் வரைகூட அந்தச் சமூகத்துக்கு ராஜாங்கத்தில் இருந்த முக்கியத்துவம் தெரிகிறது. இந்த விழுப்பராயர்களை 'விழுப்பிரமர்' என்றும் சொல்வதுண்டு. பிரமர் என்பது, பூர்வத்தில் அவர்களுக்கு இருந்த வைதீகப் பிராமண மூலத்தைக் காட்டுவது. 'அரையர்' என்பது பிறப்பாடு ஏற்பட்ட ஷத்ரிய ஸ்தானத்தைக் காட்டுவது, 'விழுப்பாடராயர் (விழுப்பாதராயர்) என்று இன்னொரு பேரும் அவர்களுக்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.
  • மேலும் விழுப்புர வாசிகளால், பரந்த நிலப்பரப்பை சுட்டுமாறு, பெரிய விழியுடைய "விழிமா நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட விழுப்புரம், சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு, பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் வந்த விஜயாலய சோழன், இப்பகுதியை மீட்டு மீண்டும் சோழப்பேரரசுடன் இணைத்தான். பின்னாளில் ஆண்ட சோழர்களிடமிருந்து வென்று, கிழக்கத்திய சாளுக்கியர்கள் ஆண்டனர். அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், பொ.ஊ. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50 ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி, முகலாயர்களின் படையெடுப்பால் பொ.ஊ. 1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜயநகரப் பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.

பொ.ஊ. 1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசுல் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே, ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு, தென்னாற்காடு மாவட்டமாக, மதராசு மாகாணாத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது.

தென்னாற்காடு மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த விழுப்புரம், 30 செப்டம்பர் 1993ஆம் ஆண்டு அன்று, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.[6]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°56′28″N 79°29′35″E / 11.941°N 79.493°E / 11.941; 79.493 ஆகும்.[7] தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 160 கி.மீ. தொலைவிலும், திருச்சி 160 கி.மீ. தொலைவிலும், சேலம் 144 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை 63 கி.மீ. தொலைவிலும், கடலூர் 47 கி.மீ. தொலைவிலும், வேலூர் 130 கி.மீ. மற்றும் ஆரணி 92 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.[8]

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
78.35%
முஸ்லிம்கள்
14.88%
கிறிஸ்தவர்கள்
6.15%
சைனர்கள்
0.38%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.01%
சமயமில்லாதவர்கள்
0.20%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 22,832 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 96,253 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,019 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,217 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,057 மற்றும் 276 ஆகவுள்ளனர்.[11]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விழுப்புரத்தில் இந்துக்கள் 78.35%, முஸ்லிம்கள் 14.88%, கிறிஸ்தவர்கள் 6.15%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.38%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.20% பேர்களும் உள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் ஆர். லட்சுமணன்
மக்களவை உறுப்பினர் து. இரவிக்குமார்

விழுப்புரம் நகராட்சியானது, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை, திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஆர். லட்சுமணன் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை, (திமுக கூட்டணி ) விடுதலை சிறுத்தைகள் கட்சி -ஐச் சேர்ந்த து. இரவிக்குமார் வென்றார்.

போக்குவரத்து[தொகு]

• விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் இயங்கி வருகிறது. இதன் மூலம் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[12]

• விழுப்புரம் நகராட்சியானது சாலை போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து[தொகு]

விழுப்புரம் நகரைப் பொறுத்த வரையில், சாலை வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதி

விழுப்புரம் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும். புதிய பேருந்து நிலையமானது, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் விழுப்புரத்தின் வழியாகச் செல்கின்றன.

வழி சேருமிடம்
செஞ்சி மார்க்கமாக செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, ஆரணி, வேலூர், ஆற்காடு, திருப்பதி செல்லும் பேருந்துகள்
வேட்டவலம் மார்க்கமாக திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, திருப்பதி, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகள்
திருக்கோவிலூர் மார்க்கமாக திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகள்
உளுந்தூர்பேட்டை மார்க்கமாக விருத்தாசலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, தேனி, பொள்ளாச்சி, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், உதகமண்டலம் செல்லும் பேருந்துகள்
பண்ருட்டி மார்க்கமாக பண்ருட்டி, நெய்வேலி, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, காரைக்கால் செல்லும் பேருந்துகள்
கடலூர் மார்க்கமாக நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள்
புதுச்சேரி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
திண்டிவனம் மார்க்கமாக திண்டிவனம், காஞ்சிபுரம், செய்யாறு, வந்தவாசி, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி, சென்னை, தாம்பரம் செல்லும் பேருந்துகள்

இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூரு, சேலம், திருத்தணி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நெய்வேலி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்வண்டி போக்குவரத்து[தொகு]

விழுப்புரம் இரயில் நிலையம்

விழுப்புரம் தொடருந்து நிலையமானது மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.[13][14] விழுப்புரத்தில் இருந்து ஐந்து கிளைகளாக இரயில் பாதைகள் பிரிகின்றன:

வானூர்தி நிலையம்[தொகு]

இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.

திருவிழா[தொகு]

கல்லூரிகள்[தொகு]

  • அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, முண்டியம்பாக்கம்.
  • அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.
  • அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்.
  • அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்.
  • மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
  • திரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம்.
  • அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்.
  • அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி, சு. கொல்லூர், அரகண்டநல்லூர்.
  • வி.ஆர்.ஸ்.கல்லூரி பொறியியல் மற்றும் தொழில் நுட்பம், அரசூர்.

சுற்றுலாத்தலங்கள்[தொகு]

வானிலை மற்றும் காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், விழுப்புரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.8
(83.8)
30.6
(87.1)
32.9
(91.2)
34.7
(94.5)
37.1
(98.8)
37.1
(98.8)
34.5
(94.1)
34.8
(94.6)
34.2
(93.6)
32.0
(89.6)
29.5
(85.1)
28.2
(82.8)
32.87
(91.16)
தாழ் சராசரி °C (°F) 20.4
(68.7)
20.8
(69.4)
22.7
(72.9)
25.6
(78.1)
27.0
(80.6)
26.9
(80.4)
25.9
(78.6)
25.3
(77.5)
24.9
(76.8)
22.1
(71.8)
22.5
(72.5)
21.2
(70.2)
23.78
(74.8)
மழைப்பொழிவுmm (inches) 20
(0.79)
7
(0.28)
6
(0.24)
16
(0.63)
40
(1.57)
45
(1.77)
80
(3.15)
149
(5.87)
135
(5.31)
222
(8.74)
216
(8.5)
110
(4.33)
1,046
(41.18)
ஆதாரம்: en.climate-data.org,[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Area-wise Population within corporations and municipalities in Tamil Nadu" (XLS). Government Of India. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  2. "Viluppuram, not Villupuram". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "விழுப்புரம் வரலாறு".
  4. "Viluppuram Census 2011".
  5. http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16399.html
  6. "தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம்".
  7. "Imperial Gazetteer of India ..." google.com.
  8. "Google Maps". Google Maps.
  9. "historic population" (PDF).
  10. "Census Info 2011 Final population totals – Viluppuram". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  11. விழுப்புரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  12. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) 2011.
  13. "Indianrailinfo – Viluppuram Junction Departures". Indianrailinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014.
  14. "Origins and history of Southern Railway" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  15. "கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா".
  16. "Climate:Viluppuram". பார்க்கப்பட்ட நாள் 4 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுப்புரம்&oldid=3890373" இலிருந்து மீள்விக்கப்பட்டது