பூந்தமல்லி

ஆள்கூறுகள்: 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E / 13.047300; 80.094500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவிருந்தவல்லி

பூந்தமல்லி

—  புறநகர்ப் பகுதி  —
பூவிருந்தவல்லி
இருப்பிடம்: பூவிருந்தவல்லி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E / 13.047300; 80.094500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பூந்தமல்லி
சட்டமன்ற உறுப்பினர்

அ. கிருட்டிணசாமி (திமுக)

மக்கள் தொகை 6,59,922 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)

குறியீடுகள்

பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

பூந்தமல்லி நகராட்சியை ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, 17 சூன் 2019 அன்று தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழில் வெளியிட்டது.[7][8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
  5. "Poonamallee". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
  8. Avadi becomes corporation
  9. Avadi becomes TN’s 15th municipal corporation
  10. 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
  11. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?

மேலும் பார்க்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poonamallee
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தமல்லி&oldid=3876744" இலிருந்து மீள்விக்கப்பட்டது