ஆவடி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவடி மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு17 சூன் 2019
தலைமை
மேயர்
ஜி. உதயகுமார், திமுக
4 மார்ச் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்48
அரசியல் குழுக்கள்
திமுக கூட்டணி 43
அதிமுக 4
சுயேச்சைகள் 1

ஆவடி மாநகராட்சி இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்து தமிழ்நாட்டின் 15ஆவதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியாகும். 17 சூன் 2019 அன்று தமிழ்நாடு அரசு இதற்கான அவசர சட்டம் பிறப்பித்து அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[1][2]

ஆவடி மாநகராட்சிப் பகுதிகள்[தொகு]

புதிதாக நிறுவப்படவுள்ள ஆவடி மாநகராட்சி, தற்போது உள்ள ஆவடி நகராட்சியின் 48 வார்டுகளும் மற்றும் அதற்குட்பட்ட திருமுல்லைவாசல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.[3][4]

எதிர்காலத்தில் திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், வானகரம், நெமிலிச்சேரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில பகுதிகளையும் மக்கள் கருத்து கேட்ட பிறகு ஆவடி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆவடி மாநகராட்சி தேர்தல், 2022[தொகு]

2022-ஆம் ஆண்டில் ஆவடி மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 43 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும் மற்றும் சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றியது. மேயர் தேர்தலில் திமுகவின் ஜி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Avadi becomes corporation
  2. Avadi becomes TN’s 15th municipal corporation
  3. 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
  4. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
  5. ஆவடி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி_மாநகராட்சி&oldid=3854574" இலிருந்து மீள்விக்கப்பட்டது