குரோம்பேட்டை
குரோம்பேட்டை Chromepet | |
---|---|
புற நகர் | |
![]() MIT Flyover on GST road | |
ஆள்கூறுகள்: 12°57′06″N 80°08′46″E / 12.951600°N 80.146200°Eஆள்கூறுகள்: 12°57′06″N 80°08′46″E / 12.951600°N 80.146200°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 49 m (161 ft) |
மொழிகள் | |
• அலுவல்புர்வம் | தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
அ.கு.எண் | 600044 |
வாகனப் பதிவு | தநா-11 குரோம்பேட்டை தநா 85 திருமுடிவாக்கம் |
நகர்ப்புற திட்டமிடுதல் | சென்னை பெருநகர மேம்பாட்டு நிறுவனம் |
குடியுரிமை | சென்னை மாநகராட்சி ' |
இணையதளம் | www |
குரோம்பேட்டை (ஆங்கிலம்: Chromepet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 45-இல் பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் இடையில் இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மத்திய தொடருந்து நிலையம் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர் என்பது இந்நிறுவனத்தின் சிறப்பாகும். சென்னை புறநகர் இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ள குரோமேபேட்டை இரயில் நிலையம் இந்த பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து சேவையை அளிக்கிறது. ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியான குரோம்பேட்டை இந்திய தேசியத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது.
குரோம்பேட்டை என்பது ஒரு தமிழ் பெயர் அல்ல. முன்னதாக இந்த நகரம் குரோம் தோல் தொழிற்சலையின் இல்லமாக இருந்தது [1]. எனவே - குரோம் என்பது தொழிற்சாலையையும் பேட்டை என்பது புற நகரையும் குறிப்பதால் குரோம்பேட்டை என்ற பெயர் வந்தது. தொழிற்சாலை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அதன் இடத்தில் பாலாஜி மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள சாலையின் வழியாக நடக்கும்போது தோல் தொழிற்சாலையின் தடயங்களை அதன் பெயர் பலகையுடன் ஒருவர் இன்னும் காணமுடியும். பொ.ஊ. 1 முதல் 2 ஆம் நூற்றாண்டு வரை ஆரம்பகால சோழர்களுடன் கூட்டணி வைத்திருந்த தொண்டைமான்கள் ஆட்சி செய்த தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதியாக குரோம்பேட்டை பகுதி இருந்தது. பின்னர் அந்த பகுதி சாதவாகணர்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் பொ.ஊ. 3 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதி தொண்டை நாட்டுக்கு சொந்தமானதாக இருந்தன. வரலாற்று காலம் சரியாக பல்லவ மன்னர்களிடமிருந்து தொடங்குகிறது. பல்லாவரத்திற்கு அருகில் பொ.ஊ. 600-630 [2] காலத்தில் மகேந்திரவர்மனால் குடையப்பட்ட பல்லவபுரம் குகைக்கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக உள்ளன. மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த நரசிம்மவர்மன் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த புலிகேசிக்கு எதிராகப் போரிட்டு, குரோம்பேட்டையிலிருந்து 11 கி.மீ. (6.8 மைல்) தென்மேற்கே உள்ள மணிமங்கலத்தில் அவரைத் தோற்கடித்தார்.
சோழர் காலம்[தொகு]
பொ.ஊ. 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பிற்கால சோழர் காலத்தில் இப்பொழுது குரோம்பேட்டை என்று அழைக்கப்படும் இந்த பகுதி சுரத்தூர் நாட்டுக்கு சொந்தமானது, இது பல்லாவரம் அருகே நவீன திரிசுலம் கிராமமான திருச்சுரத்தின் காரணமாக இப்பெயரிடப்பட்டது. சுரத்தூர் நாடு தெற்கே தம்பரத்தில் இருந்து வடக்கே ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் வரை நீட்டிக்கப்பட்டது, மேலும் அதில் பம்மல், பல்லாவரம் மற்றும் திருநீர்மலை உள்ளிட்டவையும் அடங்கும் [3].
பாண்டியர், தெலுங்கு சோழர், விசயநகரப் பேரரசு[தொகு]
பின்னர் 12 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாண்டியர், தெலுங்கு சோழர் மற்றும் விசயநகர் வம்சங்கள் இப்பகுதியை ஆட்சி புரிந்தன.
ஆங்கிலேயர் ஆட்சியில்[தொகு]
18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிசார் ஆட்சியின் போது தோல் தொழில்கள் நகரின் தென்மேற்கு பகுதியில் பெருகி வளர்ந்தன. குரோம் லெதர் நிறுவனம் இந்த பகுதியில் 1912 இல் ஐரோப்பிய வணிகர் அலெக்சாண்டர் சேம்பர்சால் நிறுவப்பட்டது. அவரது வாழ்நாளுக்குப் பிறகு குரோம் லெதர் நிறுவனத்தை அவரது மனைவி ஐடா எல். சேம்பர்சு நடத்தினார். 1965 ஆம் ஆண்டில் மெட்ராசின் மாண்புமிகு நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை மற்றும் ஆணை மூலம் அவர் குரோம் லெதர் நிறுவனத்தின் மற்றும் அதன் சொத்துக்களின் ஒரே உரிமையாளரானார். 1968 இல் இறந்தார்.
குரோம் தோல் நிறுவனத்தின் நிலங்களும் சொத்துக்களும் மறைந்த ஐடா எல். சேம்பர்சுக்கு சொந்தமானவையாகும். மேலும் இரயில் நிலையத்தின் மேற்கே உள்ள பெரும்பாலான நிலங்களும் இந்நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும். . சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸ் தொழில் நுட்ப நிறுவனம் (எம்ஐடி) 1949 ஆம் ஆண்டில் குரோம்பேட்டையில் 20 எக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்டது. குடியிருப்பு மற்றும் வணிக மேம்பாடு 1960 களில் தொடங்கியது. எம்ஐடி நிறுவப்படுவதற்கு முன்னர் இப்பகுதியின் பெயர் குலசேகரபுரம் ஆகும்.
சுதந்திரத்திற்கு பின்[தொகு]
புதிய காலனியின் வளர்ச்சி மற்றும் 1950 களின் முற்பகுதியில் குரோம் தோல் நிறுவனம் குடியிருப்பு இடங்களை ஏலம் எடுத்தது போன்ற காரணங்கள் குரோம்பேட்டை பகுதியின் விரைவான குடியிருப்பு மற்றும் வணிக வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குரோம்பேட்டை மெட்ராசின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாகும்.
குரோம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகங்கள்[தொகு]
- பல்லாவரம் நகராட்சி அலுவலகம்
- வணிக விற்பனை வரி அலுவலகம்
- தபால் நிலையம்
- துணை பதிவாளர் அலுவலகம்
- காவல் நிலையம்
- பிஎஸ்என்எல் தொலைபேசி பரிமாற்றம்
- தீயணைப்பு நிலையம்
- தேசிய சித்த கல்வி நிறுவனம்
- மின்வாரிய அலுவலகம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Chrome Leathers". 23 மார்ச்சு 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
- ↑ "Dr.Gift Siromoney's Home Page". www.cmi.ac.in. 15 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dr.Gift Siromoney's Home Page". www.cmi.ac.in. 23 செப்டெம்பர் 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
சூழமைவு[தொகு]