உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை

ஆள்கூறுகள்: 12°01′09″N 79°39′12″E / 12.01917°N 79.65333°E / 12.01917; 79.65333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை
National Fossil Wood Park, Tiruvakkarai
தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை is located in தமிழ்நாடு
தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை
வகைபுதைபடிம பூங்கா
அமைவிடம்தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறு12°01′09″N 79°39′12″E / 12.01917°N 79.65333°E / 12.01917; 79.65333
பரப்பளவு247 ஏக்கர்கள் (100 ha)
உருவாக்கம்1940; 85 ஆண்டுகளுக்கு முன்னர் (1940)
இயக்குபவர்இந்திய புவியியல் ஆய்வு மையம்
நிலைபாதுகாக்கப்பட்ட பகுதி
திருவக்கரியில் காணப்படும் கல்மரத்துண்டு

திருவக்கரை தேசிய கல் மர பூங்கா (National Fossil Wood Park, Tiruvakkarai) ஒரு புவியியல் பூங்காவாகும். இது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவக்கரை கிராமத்தில் அமைந்து உள்ளது. இக்கல்ம்ப் பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கபடுகிறது.[1] ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவர் முதன்முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை 1781இல் ஆவணம் செய்தார். இக்கல்மரங்களைக் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் குரல் கொடுத்த பின் இந்திய தேசிய புவியியல் துறை 1951 இல் இவற்றுக்கு ஒரு பூங்காவை ஏற்படுத்தியது. இக்கல்மரங்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளன.

இங்கு இருக்கும் கல் மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு 200 மர தண்டுகள் சுமார் 247 ஏக்கர்(1.00) பரப்பளவில் உள்ளது. மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இங்கு இருந்த காட்டு பகுதியானது பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகபெரும் வெள்ளத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்க வேண்டும். இங்கு இருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளதைச் சான்றாக கருதலாம்.[2]

அமைவிடம்

[தொகு]

இந்தக் கல்மரப்பூங்கா புதுச்சேரியில் இருந்து மயிலம் செல்லும் வழியில் 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கல்மரப் பூங்கா காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை திறந்திருக்கும்.

காலம்

[தொகு]

சுமார் ஒரு கோடி முன்னர் உலகத்தில் 4 பனியுகங்கள் தோன்றின. இதை குவார்ட்டர்னரி காலம் என்று கூறுவர். அப்போது ஏற்பட்ட புவியியல் மாறுபாட்டால் மரங்கள் புதைந்து படிமங்களாக மாறின. அவற்றுள் பட்டையில்லாத தாவர வகையைச் சேர்ந்த மரங்களும் அடங்கும். இப்பட்டையில்லாத தாவரங்கள் மொட்டு இலாமல் சிதில்கள் மூலமே இனப்பெருக்கம் செய்ய வல்லவை. திருவக்கரை மரங்களில் சிலவும் இந்த பேரினத்தையே சேர்ந்தவை.[3]

அதே நேரம் திருவக்கரையை அடுத்துள்ள சேதாரப்பட்டு முதலிய இடங்களில் மீன் இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ளன.[4] இதனால் திருவக்கரை பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது தெளிவு.[4] ஒரு காலத்தில் இங்கு 180 கல்மரங்கள் காணப்பட்டன. தற்போது 11 மரங்களும் 60 கலமரத்துண்டுகளுமே இங்கு காணப்படுகின்றன. மற்றவை இங்குள்ள மக்களாலும் சுற்றுலா பயணிகளாலும் மண்வெட்டிகளாலும் திருடப்பட்டுவிட்டன.

இக்கல்மரங்களில் சில பட்டையோ, கிளைகளோ, வேர்களோ காணப்படாமையால் இம்மரங்கள் கல்லாக மாறுமுன்பே திருவக்கரையில் இருந்தது தெளிவு. மேலும் இம்மரங்கள் கல்மரங்களான பிறகு இடம் மாற்றப்பட்டதற்கு எந்த சான்றுமில்லை. அதனால் இம்மரங்களோடு ஒட்டிய பாறைகளின் காலமே இம்மரங்களின் காலமென எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் மணற்கல் வகை பாறைகளோடு ஒட்டியுள்ள இக்கல்மரங்கள் குறைந்தபட்சம் சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையானவை என்று கூறலாம்.[3]

மர படிமங்கள்

[தொகு]

"கல்லாகச்சமைதல்" என்னும் முறையில் இங்கு இருந்த 77மரபடிமங்கள் சிலிக்கா எனப்படும் மணல் துகள்களாக மாற்றி அதனுள் இருக்கும் நீரை இறுக்கத்தினால் வெளி ஏற்றி மேல்படிந்த இந்த நிலை அடைந்தன என கூறலாம் .உலகில் உள்ள சில தொல்லியில் பூங்கா மட்டுமே மட்டும் இங்கிருக்கும் படிமங்கள் போல் பாதுகாப்பாக இருக்கும் அதற்கும் காரணம் இங்கு இருந்த சிலிக்கா மீது எரிமலை சாம்பல் படிந்து இருக்க வேண்டும் .[5]

படிமங்களின் தரம்

[தொகு]

இங்கு இருக்கு மர படிமங்களை கடலூர் மணற் கற்பாறை என்று கூறுகிறார்கள்.இங்கு இருக்கும் சில கல் மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றதில் அதன் சுருள் வளையம் நம்மால் பார்க்க முடியும்.அந்த சுருள் வளையங்களை எண்ணி அவற்றின் வயதை நம்மால் கணக்கிட முடியும் .[6]

நம்பிக்கை

[தொகு]

மகாவிட்ணுவால் கொல்லப்பட்ட அரக்கனின் எலும்புகளே இக்கல்மரங்கள் என்பது திருவக்கரை மக்களின் நம்பிக்கை.[3]

புகைப்பட காட்சியகங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-07. Retrieved 2021-12-24.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/lifeless-air-hovers-over-fossil-wood-park/article2898907.ece
  3. 3.0 3.1 3.2 www.thehindu.com(செப்டம்பர் 26, 2010). "A repository of spectacularly preserved trees". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: செப்டம்பர் 30, 2012.
  4. 4.0 4.1 பேராசிரியர் சுந்தர சண்முகனார் (2002). கெடிலக்கரை நாகரிகம். மணிவாசகர் பதிப்பகம். pp. 96, 97.
  5. http://www.thehindu.com/mp/2004/01/17/stories/2004011700020100.htm
  6. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-repository-of-spectacularly-preserved-fossilized-trees/article794856.ece

உசாத்துணை

[தொகு]
  • வேல்முருகன் சு. திருவக்கரை வரலாறு. புதுச்சேரி.
  • வேல் முருகன் சு. பண்டைத் தடயம். புதுச்சேரி: மணிவாசகர் பதிப்பகம். pp. 47–63.

வெளி இணைப்புகள்

[தொகு]