தென்காசி
தென்காசி | |
---|---|
தேர்வு நிலை நகராட்சி | |
![]() தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோயில் | |
இந்திய வரைபடத்தில் உள்ள இடம். | |
ஆள்கூறுகள்: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°Eஆள்கூறுகள்: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• Body | தென்காசி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | தனுஷ் எம். குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் கீ. சு. சமீரான், இ. ஆ. ப |
ஏற்றம் | 143 m (469 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 70,545 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 627811 , 627814 , 627808, 627803 , 627804. |
தொலைபேசி குறியீடு | 04633 |
வாகனப் பதிவு | TN-76 |
சென்னையிலிருந்து தொலைவு | 626 கி.மீ (389 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 302 கி.மீ (188 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 165 கி.மீ (103 மைல்) |
நெல்லையிலிருந்து தொலைவு | 60 கி.மீ (37 மைல்) |
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலைநகராட்சியும் ஆகும்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு[தொகு]
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[3] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 87.7% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.04%, பெண்களின் கல்வியறிவு 82.52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தென்காசியில் இந்துக்கள் 62.26%, முஸ்லிம்கள் 34.79%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01% மற்றும் சமயமில்லாதவர்கள் 0.14% பேர்களும் உள்ளனர்.
புதிய மாவட்டமாக உதயமாதல்[தொகு]
தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஓர் புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து 2016 ம் ஆண்டு முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.பின் நீண்ட இழுபறிக்குப் பின் தமிழகத்தின் 34வது மாவட்டமாக திருநெல்வேலியில் இருந்து 2019ம் ஆண்டு சூலை மாதம்18ம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் விதி எண் 110-ன் கீழ் என அறிவித்தும் பின் அந்த மாவட்டத்திற்கு புதிதாக இ.ஆ.ப சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தார். இதனால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச்சாமிக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. இந்த புதிய மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
வணிகம்[தொகு]
தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் |
மக்களவை உறுப்பினர் | தனுஷ் எம். குமார் |
தென்காசி நகராட்சியானது தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த தனுஷ் எம். குமார் வென்றார்.
கல்வி நிறுவனங்கள்[தொகு]
கல்லூரிகள்[தொகு]
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
- சட்டநாத கரையாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி
- ஜே. பி. பொறியியல் கல்லூரி
- ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அருள்மகு செந்திளாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி
காமராஜார் அரசு கலைகல்லூரி
பள்ளிகள்[தொகு]
- வீரமாமுனிவர் ஆர். சி மேல்நிலைப்பள்ளி
- புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி
- இராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
- வள்ளி நாயக தொடக்கப்பள்ளி
- செய்யத் மெட்ரிக் பள்ளி
- அக்பர் தொடக்கப்பள்ளி
- இ. சி. இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
- இந்து மேல்நிலைப்பள்ளி- கீழப்புலியூர்
- நேரு மேல்நிலைப்பள்ளி
- எம். கே. வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- USP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- நல்லமணி மெட்ரிக்குலேசன் பள்ளி
- AG மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- இசக்கி வித்யாலயா பள்ளி (CBSC)
வங்கிகள்[தொகு]
- தமிழ்நாடு கிராம வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இந்தியன் வங்கி
- கனரா வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- கார்ப்பரேஷன் வங்கி
- ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
- கரூர் வைஸ்யா வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- பேங்க் ஆஃப் பரோடா
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல்வலசை
- IDBI வங்கி
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 1986 வது வருடம் பொது மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ துறைகளுடன் செயல்பட்டு வருகிறது . மருத்துவமனையில் தினசரி 1500 - 2000 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர் . மேலும் 337 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அனைத்து சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையாக செயல்பட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவை வேண்டுகிறோம் .
ஆலயங்கள்[தொகு]
கோயில்கள்[தொகு]
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- குலசேகரநாதர் கோயில்
- மேல முத்தார அம்மன் கோயில்
- திருவிலஞ்சி பெருமான் கோவில்
- குற்றாலநாதர் திருக்கோவில்
- ஆய்க்குடி பாலசுப்பிரமணி திருக்கோவில்
தேவாலயங்கள்[தொகு]
புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.[சான்று தேவை] கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.
பள்ளிவாசல்கள்[தொகு]
- வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
- புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
- செய்யது சுலைமான் பிர்ஜதே ஜூம் ஆ பள்ளிவாசல்,
- தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்,
- இஸ்மாயீல் மீயான் ஜும்மா பள்ளிவாசல்,
- நடுபேட்டை ஜூம் ஆ பள்ளிவாசல்,
- பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
- மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ராஜ் மீயான் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஜமாலியா நகர் ஜும்மா பள்ளி வாசல்,
- மாலிக்நகர் ஜும்மா பள்ளி வாசல்,
- ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்,
- மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல் (புதிய பேருந்து நிலையம்)
சுற்றுலா தலங்கள்[தொகு]
- ராமநதி அணை
- உலக அம்மன் கோவில்
- குற்றாலம்
- ஐந்தருவி
- புலியருவி
- பழைய குற்றாலம்
- குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை)
- திருமலைக் கோவில்
- அடவிநயினார் நீர்த்தேக்கம்
- அச்சங்கோவில் (கேரள மாநிலம்)
புகழ்பெற்ற சிலர்[தொகு]
- திரிகூடராசப்பர்
- ரசிகமணி டி. கே. சி
- தியாகி சட்டநாத கரையாளர்
- சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப.)
- வாஞ்சிநாதன்
- மாமன்னர் பூலித்தேவன்
- மாவீரன் ஒண்டிவீரன் .
போக்குவரத்து[தொகு]
தொடருந்து போக்குவரத்து[தொகு]
தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
- சென்னை- செங்கோட்டை- சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும் உண்டு.
- சிலம்பு விரைவு வண்டி (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
- சென்னை - கொல்லம் தினசரி விரைவுத் தொடர்வண்டி (வழி: செங்கோட்டை)
- மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்) செங்கோட்டை வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும். தினமும் மதியம் திருநெல்வேலியிலிருந்து - கொல்லத்துக்கு பயணிகள் ரயில் இயக்கம் உள்ளது.
- திருநெல்வேலியிலிருந்து - செங்கோட்டை (வழி - டவுன், பேட்டை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம், பாவூர்சத்திரம்) வரையான பயணிகள் இரயில் காலை மாலை என இரண்டு வேளையும் உள்ளது.
பேருந்து போக்குவரத்து[தொகு]
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, போடி, விருதுநகர், திருச்சி, திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், வேளாங்கண்ணி, சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், அம்பநாடு, கொட்டாரக்கரை, காயம்குளம், எர்னாகுளம், கோழிக்கோடு, கருநாகப்பள்ளி, மாவேலிக்கரை போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
விமான நிலையங்கள்[தொகு]
- மதுரை வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்),
- திருவனந்தபுரம் வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்),
- தூத்துக்குடி வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2011 Census Data : Search Results". பார்த்த நாள் 26 December 2017.
- ↑ "Tenkasi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ தென்காசி தல புராணம்
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 17, 2019.