திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம்
തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം

Trivandrum intl Airport T3.jpg
International terminal (Terminal 3) of the Airport

IATA: TRVICAO: VOTV
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் இந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு
அமைவிடம் திருவனந்தபுரம்
உயரம் AMSL 13 அடி / 4 மீ
ஆள்கூறுகள் 08°28′56″N 76°55′12″E / 8.48222°N 76.92000°E / 8.48222; 76.92000
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
14/32 3,398 11,148 Asphalt

திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.

ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]