வாசுதேவநல்லூர்

ஆள்கூறுகள்: 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர்
இருப்பிடம்: வாசுதேவநல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் சிவகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி வாசுதேவநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

டி. சதன் திருமலை குமார் (திமுக (மதிமுக))

மக்கள் தொகை 21,361 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

இணையதளம் www.townpanchayat.in/vasudevanallur

வாசுதேவநல்லூர் (ஆங்கிலம்:Vasudevanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திலுள்ள, சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இங்குள்ளது.

அமைவிடம்[தொகு]

இது மதுரை - தென்காசி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிிலும், தென்காசியிருந்து 37 கி.மீ தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது திருநெல்வேலியிருந்து 85 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும்; இராஜபாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5833 வீடுகளும், 21361 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

பொருளாதாரம்[தொகு]

வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் தரணி சர்க்கரை ஆலை இயங்குகிறது.[7] விவசாயம் செழிப்பான பகுதி மற்றும் அதிகபட்ச பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து[தொகு]

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் (NH744) அமைந்திருப்பதால், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களுக்கும் இராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை போன்ற நகரங்களுக்கும் கேரள மாநிலத்திற்கும் நிமிட கணக்கில் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

இந்நகரம் சாலை போக்குவரத்தில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இரயில் நிலையங்கள்[தொகு]

சங்கரன்கோவில், இராஜபாளையம், தென்காசி இரயில் நிலையங்கள் அருகில் உள்ள இரயில் நிலையங்கள் ஆகும்.

விமான நிலையம்[தொகு]

திருவனந்தபுரம் (கேரளா மாநிலம்) மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையங்கள் அருகில் உள்ள விமான நிலையங்கள் ஆகும்.

முக்கிய இடங்கள்[தொகு]

இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் இதுவே ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட மருதநாயகம் என்பவருக்கும் பூலித்தேவனுக்கும் முதன்முதலாக இங்கு போர் நடந்தது அதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார் இந்த ஊர் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தை எனுமிடத்தில் அப்போர் நடந்தது என வரலாற்று புராணங்கள் கூறுகின்றன இதை பறைசாற்றும் விதமாக இங்கு ஒரு நடுகல்லும் உள்ளது. அதில் புலித்தேவனின் பெயரும் அவர் தளபதி வெண்ணிக் காலாடி மற்றும் போர் வீரர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளன.[சான்று தேவை]

அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள முதலாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே திருக்கோவில்)ஆகிய இடங்களில் உள்ளன).

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-அண்மையில் குடமுழுக்கு நடந்துள்ளது

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை சிறப்பாக கருதப்படுகிறது.

இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[9]

இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

சிறப்பு[தொகு]

  • நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்
  • கிரீன் பில்டர்ஸ் இண்ட்டீரியர் & எக்ஸ்டீரியர் பிரபலமானவை

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவநல்லூர்&oldid=3740911" இருந்து மீள்விக்கப்பட்டது