தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் | |
பொதிகை மாவட்டம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம் |
மாவட்ட துவக்கம் | 22 நவம்பர் 2019 [1] |
தலைமையகம் | தென்காசி |
மிகப்பெரிய நகரம் | தென்காசி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[2] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[3] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப |
சட்டமன்றம் (தொகுதிகள்) | 5 (5) |
மொழிகள் | தமிழ் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 37 °C (99 °F) |
குறியீடுகள்
|
தென்காசி மாவட்டம் (Tenkasi District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மேற்கே கேரள மாநிலமும், கிழக்கே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும், வடக்கே விருதுநகர் மாவட்டத்தையும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தென்காசி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4][5] புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக, திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., நியமிக்கப்பட்டார்.[6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர், எடப்பாடி க. பழனிசாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]
மாவட்ட நிர்வாகம்[தொகு]
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]
வருவாய் கோட்டங்கள்[தொகு]
வருவாய் வட்டங்கள்[தொகு]
- சங்கரன்கோயில் வட்டம்
- தென்காசி வட்டம்
- கடையநல்லூர் வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- சிவகிரி வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]
நகராட்சிகள்[தொகு]
பேரூராட்சிகள்[தொகு]
- குற்றாலம்
- சுரண்டை
- கீழப்பாவூர்
- பண்பொழி
- இலஞ்சி
- செங்கோட்டை புதூர்
- அச்சம்புதூர்
- ஆலங்குளம்
- ஆய்க்குடி
- இராயகிரி
- சாம்பவர் வடகரை
- சுந்தரபாண்டிபுரம்
- வாசுதேவநல்லூர்
- சிவகிரி
- திருவேங்கடம்
- மேலகரம்
- வடகரை
- கடையம்
- ஆழ்வார்குருச்சி
- வீரகேரளம்புதூர்
- வீராணம்
ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]
இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்[தொகு]
தென்காசி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியும் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
நாடாளுமன்றத் தொகுதிகள்[தொகு]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
- தென்காசி (சட்டமன்றத் தொகுதி)
- சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
- கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
- வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
- ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்[தொகு]
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- கரிவலம்வந்தநல்லூர் - பால்வண்ணநாதர் கோவில்
- பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில்
- இலஞ்சி குமாரர் கோவில்
- வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
- வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் திருக்கோவில்
- தென்காசி ஸையது சுலைமான் தர்கா
- பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர் தர்கா
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்[தொகு]
- சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில் - நிலம் தலம் (பிரித்வி)
- தாருகாபுரம் - அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில் - நீர் தலம் (அப்பு)
- கரிவலம்வந்தநல்லூர் - அருள்மிகு பால்வண்ணநாதர் கோயில் - நெருப்பு தலம் (தேயு)
- தென்மலை - அருள்மிகு திருபுரநாதேஸ்வரர் கோயில் - காற்று தலம் (வாயு)
- தேவதானம் - அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் - ஆகாய தலம் (ஆகாசம்). (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)
சிறப்புக்கள்[தொகு]
தமிழின் தோற்றம்[தொகு]
தமிழ் மொழியானது, பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி, சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.
குற்றாலம்[தொகு]
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு சூன், சூலை, ஆகத்து மாதங்களில், அருவிகளில் குளிக்க திரளான மக்கள் கூடுவர். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத துவக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட துவங்கிவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சன்னதி உள்ளது.
பூலித்தேவன் நினைவகம்[தொகு]
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
அல்வா[தொகு]
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும், உலக அளவில் தமிழர்கள் மத்தியில் சிறப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில் பிரியாணி[தொகு]
தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும், இதன் சிறப்புகளாக உள்ளன. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.
செவ்வாடு[தொகு]
இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்கள்[தொகு]
- இராமநதி
- கடனாநதி
- குண்டாறு
- அடவிநயினார்
- கருப்பாநதி
- மோட்டை
- செண்பகவல்லி அணை
அருவிகள்[தொகு]
- பழத்தோட்டம் அருவி (ONLY VIP)
- எருமைசாவடி அருவி (தனியார்)
- தேன் அருவி ( வனம் பகுதி )
- பேரருவி
- பழைய குற்றால அருவி
- சிற்றருவி
- ஐந்தருவி
- புலியருவி
- செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது
நதிகள்[தொகு]
- சிற்றாறு
- குண்டாறு நதி
- ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.
- நிட்சேபநதி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- ↑ தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- ↑ தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
- ↑ மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்[தொகு]
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி
- தென்காசி மாவட்ட செய்திகள்
- உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’ தி இந்து தமிழ் நவம்பர் 6 2016