தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை | |
---|---|
தமிழ்நாடு காவல் துறையின் சின்னம் | |
குறிக்கோள் | வாய்மையே வெல்லும் |
துறையின் கண்ணோட்டம் | |
பணியாளர்கள் | 1,00,932 |
ஆண்டு வரவு செலவு திட்டம் | ₹7,749 கோடி (US$1.02 பில்லியன்) (2019-20 est.) [1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | தமிழ்நாடு, இந்தியா |
![]() | |
தமிழ்நாடு காவல் துறையின் அதிகார வரம்பின் வரைபடம் | |
அளவு | 130,058 சதுர கிலோமீட்டர்கள் (50,216 sq mi) |
மக்கள் தொகை | 7,21,38,958 |
சட்ட அதிகார வரம்பு | தமிழ்நாடு மாநிலம் |
ஆட்சிக் குழு | உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
Overviewed by | உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, தமிழ்நாடு |
தலைமையகம் | டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 |
துறை நிருவாகி |
|
Website | |
www.tnpolice.gov.in |
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இஃது இந்தியாவில் ஐந்தாவது[2] பெரிய காவல்துறை ஆகும்.
வரலாறு[தொகு]
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்ப தொடங்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலும் 1888, ஏப்ரல் 12 , Governor-General -இன் ஒப்புதலும் 1888, சூன் 26 வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஓர் ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது. ஆண்கள் மட்டுமே பணியாற்றிவந்த தமிழ்நாடு காவல் துறையில் முதன்முதலில் 1973 இல் பெண்களும் சேர்த்துக்கொள்ளபட்டனர்.[3]
துறை அமைப்பு[தொகு]
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் , திருநெல்வேலி, திருப்பூர், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 38 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். இவர்களைத் தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்[தொகு]
- சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
- ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
- பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
- பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
- கடலோர காவல் துறை (Coastal Security Group)
- குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
- பொருளாதாரச் சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
- செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
- இரயில்வே காவல்துறை (Railways)
- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
- சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
- குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
- போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
- மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
- குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
- பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறைப் பதவிகள்[தொகு]
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியில் இருப்பவர்களுக்கு பணிக்கேற்ற குறியீடுகள் அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் இடம் பெற்றிருக்கின்றன. அவை குறித்த அட்டவணை;
பதவி | பதவிச் சின்னம் |
---|---|
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) | அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (ADGP) | அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் தலைவர் (IGP) | ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து |
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) | மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) | மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
ஆய்வாளர் (Inspector) | மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
உதவி ஆய்வாளர் (Sub-Inspector) | இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
தலைமைக் காவலர் (Head Constable) | சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
முதல்நிலைக் காவலர் (PC-I) | சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) | பட்டை எதுவுமில்லை. |
தமிழகத்தில் குற்றங்கள்[தொகு]
தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.
வ.எண் | குற்றம் | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | கொலை | 1594 | 1647 | 1487 | 1389 | 1365 | 1273 | 1521 | 1630 | 1644 |
2 | ஆதாயத்திற்காகக் கொலை | 81 | 75 | 104 | 73 | 74 | 89 | 102 | 105 | 123 |
3 | குழுக் கொள்ளை | 158 | 178 | 95 | 72 | 73 | 95 | 88 | 100 | 97 |
4 | வழிப்பறி | 669 | 650 | 514 | 464 | 437 | 450 | 495 | 662 | 1144 |
5 | வீட்டில் கொள்ளை | 5957 | 5532 | 4849 | 4147 | 3738 | 3300 | 3717 | 3849 | 4221 |
6 | திருட்டு | 16940 | 18614 | 18213 | 17530 | 15851 | 13651 | 13217 | 15019 | 15712 |
7 | மொத்தம் | 25399 | 26696 | 25262 | 23675 | 21538 | 18859 | 19140 | 21365 | 22941 |
காவல்துறையில் பெண்கள்[தொகு]
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது
காவலர் பயிற்சிக் கல்லூரி[தொகு]
காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்குக் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.
விமர்சனங்கள்[தொகு]
தமிழ்நாடு காவல்துறை மீது மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், இலஞ்ச ஊழல் பரவல், அரசியல் மயமாக்கம் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[4][5][6] 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல் நிலையங்களில் புகார் செய்யும்போது அதைப் பதிவு செய்யாத காவலர்கள் மீது வழக்கு பதியலாம் என்று டிஜீபிக்கு 8 கட்டளைகளைக் கொடுத்துள்ளது.[7] தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிவரும் காவல் கஷ்டடி[தெளிவுபடுத்துக] கொலைகள் காவல்துறைக்கு ஒரு பின்னடைவாக உள்ளது.
தமிழகக் காவல்துறை பயன்படுத்தும் ஆயுதங்கள்[தொகு]
ஆதாரம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Nadu Budget Analysis 2019-20" (PDF). prsindia.org. 2019.
- ↑ தமிழ்நாடு காவல்துறை இணையம்-தமிழ்நாடு காவல்துறைப் பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 05.05.2009
- ↑ "தமிழகத்தில் பொன்விழா காணும் 'பெண் போலீஸ்' - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16-ம் தேதி விழா நடத்த திட்டம்". Hindu Tamil Thisai. 2023-03-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Unlawful killings by the police in Tamil Nadu
- ↑ Report details police atrocities
- ↑ Rival's revenge in Tamil Nadu
- ↑ காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு