வாணியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணியாறு அணை

வாணியாறு என்னும் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு சேர்வராயன் மலையில் ஏற்காடுக்கு அருகில் தோன்றி தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டிப் பகுதிகளில் பாய்ந்து அரூரைக் கடந்தது இப்பகுதிகளை செழுமையாக்கி பாம்பாற்றாேடு கலந்து சிறிது தூரத்தில் பெண்ணையாற்றாேடு சேர்கிறது.[1] இவ்வாற்றின் குறுக்கே வாணியாறு அணை என்னும் பெயரில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காடு என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது.[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 13-50". பழனியப்பா பிரதர்ஸ். 17 நவம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தர்மபுரி மாவட்ட குறிப்பேடு 2013-14" (PDF). 2017-05-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியாறு&oldid=3672211" இருந்து மீள்விக்கப்பட்டது