பெருங்குடி ஏரி
பெருங்குடி ஏரி (Perungudi Lake) என்பது 50 ஏக்ர் பரப்பளவிலான ஒரு ஏரியாகும். இது தமிழ்நாட்டின் சென்னையின் தகவல் தொழில்நுட்ப நடைபாதையான, ராஜீவ் காந்தி சாலை அருகே அமைந்துள்ளது. இது சென்னையின் பாதுகாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இது முழுமையாக சுற்றுச் சுவர் கொண்டும் கிழக்கு மற்றும் தெற்குப்பக்கங்களில் நடை பாதைகள் அமைக்கப்பட்டும் உள்ளன.
காலத்தில், ஏரி அதன் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமாக இருந்தது. தற்போதும் இந்த ஏரி சுற்றியுள்ள சில குடியிருப்புகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில், மற்றும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதில் உதவுகிறது. அதிக மழைக்குப் பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வாய்கால்கள் வழியாக ஏரிக்குச் செல்கிறது.
பெருங்குடி ஏரி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் பெருங்குடி / வேளச்சேரி / பள்ளிக்கரணைவழியாக இணைக்கப்பட்டுள்ளது.
அருகில் முதன்மையான சில குடியிருப்புகளின் பெயர்கள் குறிஞ்சி நகர், காமராஜ் நகர், ரமணா கட்டிடம், கிரீன் ஏக்கர்ஸ் போன்றவை ஆகும்.
2015 வெள்ளமும் சுயபரிசோதனையும்[தொகு]
இந்த ஏரியில் அபகரிப்புகள் மற்றும் மோசமான பராமரிப்பின் காரணமாக 2015 திசம்பரில் ஏற்பட்ட பெருமழையின்போது 25% விழுக்கடு அளவுக்கே ஏரியால் மழை நீரை தக்க வைக்க இயன்றது. இந்த ஏரியின் அழகு அதன் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் மாசு, துஷ்பிரயோகம், அபகரிப்புகள், சாக்கடை நீர் கலத்தல், கழிப்பிடங்களை, நீர் திருட்டு ஆகியவற்றில் இருந்து ஏரியைப் பாதுகாக்க மக்கள் மன்றம் தொடங்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். 2016 ஜனவரி 26 ஆம் திகதி அருகிலுள்ள 15 குடியிருப்பு சங்கங்களில் இருந்து மக்கள் ஏரியில் கூடி ஏரி பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒன்றாக கைகோர்த்தனர்.[1][2][3]