பானாசூரா சாகர் அணை
Appearance
(பானாசுர சாகர் அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பானாசூரா சாகர் அணை கேரள மாநில மின்சார வாரியத்தினால் கரமனதோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது பனமரம் ஆற்றின் துணை ஆறாகும். பனமரம் கபினி ஆற்றின் துணை ஆறாகும். பானாசுர சாகர் திட்டம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதன் நோக்கம் கக்கயம் நீர் மின் திட்டத்துக்கு தேவையான நீரை அளிப்பதும் அப்பகுதியின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதுமாகும்.
பானாசுர சாகர் அணை கல்பற்றாவிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்திலுள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். பானாசுர சாகர் அணை இந்தியாவிலேயே பெரிய மண் அணையாகும் (earthen dam). இவ்வணை நிரம்பும் போது பல தீவுகளை உருவாக்குகிறது. அத்தீவுகளும் பின்னனியில் உள்ள பானாசுர மலையும் அருமையான காட்சியை உண்டாக்குகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Banasurasagar Dam – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-30.வார்ப்புரு:CC-notice
- ↑ "Kakkayam Dam Reservoir - Wikimapia". wikimapia.org. Retrieved 2015-12-16.
- ↑ "Kerala: Solar panel atop dam a reality". 30 April 2016.