துஷாராகிரி அருவி
துஷாராகிரி அருவி | |
---|---|
![]() Welcome to Thusharagiri | |
![]() | |
அமைவிடம் | இந்தியா, கேரளம், கோழிக்கோடு மாவட்டம் |
ஆள்கூறு | 11°28′21.24″N 76°3′13.43″E / 11.4725667°N 76.0537306°E |
மொத்த உயரம் | 75 மீட்டர்கள் (246 ft) |
நீர்வழி | சாலிப்புழா ஆறு |
துஷாராகிரி அருவி (Thusharagiri Falls) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அருவி ஆகும்.
தேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றும் இரண்டு நீரோடைகள் ஒன்றாக கலந்து சாலிப்புழா ஆற்றை உருவாக்குகின்றன. இந்த ஆற்றிலிருந்து மூன்று அருவிகள் உண்டாகின்றன. இந்த அருவியில் எழும் பனி மூட்டத்தின் காரணமாகவே இந்த மலை, 'தூஷாராகிரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று அருவிகளில் 75 மீட்டர்கள் (246 ft) உயரத்தில் இருந்து விழும் தேன்பாறை அருவியே உயரமானதாகும். இரண்டு பிற அருவிகள் ஏரட்டுமுக்கு அருவி, மழவில் அருவி என்பவையாகும்.[1][2][3]
துஷாராகிரி பாலம்[தொகு]
துஷாராகிரி பாலம் துஷாராகிரி அருவிக்கு அருகிலுள்ள சாலிப்புழாவில் அமைந்துள்ளது. இது கேரளாவின் மிக உயரமான வளைவு பாலமாகும்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Calicut, the traditional capital of northern Kerala". Thusharagiri Waterfalls. www.calicut.net. 2010-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "keralatourism.org thusharagiri waterfalls". Thusharagiri Waterfalls. www.keralatourism.org.
- ↑ "Calicut, the traditional capital of northern Kerala". Thusharagiri Waterfalls. www.calicut.net. 2010-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-22 அன்று பார்க்கப்பட்டது.