நென்மாரா வல்லங்கி வேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நென்மாரா வல்லங்கி வேலா
நென்மாரா வல்லங்கி வேலா

2019

வல்லங்கி தேசம் : தலைவர் சி. அரிதாசன்
அதிகாரப்பூர்வ பெயர்நென்மாரா வல்லங்கி வேலா, மலையாளம்: നെന്മാറ വല്ലങ്ങി വേല
கடைபிடிப்போர்மலையாளிகள், இந்துக்கள்
வகைஇந்துக்கள் பாரம்பரியச் சடங்கு
அனுசரிப்புகள்கோவில் திருவிழா, வெடிக்கேட்டு, மேளம், ஆனபந்தல்l
நாள்3 ஏப்ரல்;[ மலையாள நாட்காட்டியின் மீனம் 20
நெம்மாரா வேலா பந்தலில் தெய்வ விக்கிரகத்தை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானைகள்
நெல்லிகுளங்கர கோயில்

நென்மாரா வல்லங்கி வேலா ( மலையாளம்: നെന്മാറ വല്ലങ്ങി വേല ) அல்லது வல்லங்கி நென்மாரா வேலா என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான வருடாந்திர திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழா பாலக்காடு மாவட்டத்தில் நெம்மரா கிராமத்தின் பெண் தெய்வமான வல்லங்கி நெல்லிக்குளங்கரை பகவதி அம்மனுக்குச் அன்புச் சடங்காக நடத்தப்படுகிறது.

நெம்மாரா மற்றும் வல்லங்கி கிராமம்[தொகு]

நெம்மாரா மற்றும் வல்லங்கி ஆகியவை பாலக்காடு மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு அண்டை கிராமங்கள் ஆகும்., இது நெல்லியம்பதி மலைகளின் பள்ளத்தாக்கில் உள்ளது.பச்சை கம்பளம் போர்த்திய நெல் வயல்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் திருவிழா மைதானமாக மாறுகின்றன. மலையாள நாட்காட்டியின் படி (ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் 2 அல்லது 3 ஆம் தேதி) இந்தத் திருவிழா திருவிழா 'மீனம்' 20 ஆம் தேதி வருகிறது. [1] 'கொடியெட்டம்' (ஆரம்பம்) ஒவ்வொரு ஆண்டும் 'மீனம் 1' அன்று கொண்டாடப்படும். 'மீனம்' முதல் 20 நாட்களுக்கு கொண்டாட்டம் தொடர்கிறது, 20 ஆம் தேதி வேலா திருவிழா கொண்டாடப்படும். நெல் அறுவடைக்குப் பிறகு நெம்மாரா மற்றும் வல்லங்கி கிராமங்களால் கொண்டாடப்படும் இந்தத் வருடாந்திர வேலா திருவிழா, பட்டாசு மற்றும் அலங்கரிக்கப்பட்ட யானைகளை காட்சிப்படுத்துவதில் பிரபலமாக உள்ளது . [2]

திருவிழா[தொகு]

இது வண்ணங்கள், கலை வடிவங்கள், பட்டாசு, யானைகளின் திருவிழா. பஞ்ச வாத்தியங்கள், பாண்டி மேளம் ஆகியவை கேரளாவின் கலாச்சார கலை வடிவங்களாகும், இது கேரள மாநிலத்தின் சிறந்த கலைஞர்களைக் கொண்டு இங்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேசமும் (இங்கு தேசம் என்பது நெம்மாரா மற்றும் வல்லங்கி ஆகிய கிராமங்களைக் குறிக்கிறது) மூங்கில் மற்றும் மரத்தைப் பயன்படுத்தி 'ஆனபந்தல்' என்று அழைக்கப்படும் பெரிய உள்கட்டமைப்பு கொண்ட கொட்டகை உருவாக்கி மேலும் சிறிய கின் விளக்குகளைக் பயன்படுத்தி மின்மயமாக்கப்பட்டு ஒளிரூட்டப்படும்., இது திருவிழாவிற்கு அதிக அழகு சோ்க்கின்றன. கேரளாவின் மிகச்சிறந்த யானைகள் ஊர்வலத்தில் இரண்டு ஊர்களில் இருந்தும் நெல்லிகுளங்கர பகவதியை அம்மனைச் சந்திக்க அலங்கரிக்கப்ட்ட யானைகள் நெல்லிகுளங்கர கோயிலுக்கு அழைத்து வரப்படுகின்றன.

யானை அலங்காரம்[தொகு]

யானைகள் பின்வரும் அணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதன் தோற்றம் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

நெட்டிப்பட்டம்: இவை யானைகளின் நெற்றியை மூடியிருக்கும் தங்க அணிகளன் ஆகும். நெட்டிப்பட்டம் என்பது இந்த அழகிய பாலூட்டியின் கம்பீரத் தோற்றத்தை அதிகரிக்கும் வகையிலான வடிவமைப்பு மற்றும் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தங்க அணியின் ஓரங்களானது வண்ணமயமான சடையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மணிகள்: வண்ணக் கயிற்றால் கட்டப்பட்ட தங்க மணிகள் கொண்ட கயிறானது யானையின் கழுத்துடன் சேர்த்து பிணைக்கப்பட்டுள்ளது.

கழுத்தணி: யானைகளானது தங்கத்தால் மூடப்பட்டிருக்கும் கழுத்து- சங்கிலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

குடைகள்: தங்கத்தால் கட்டப்பட்ட பலபலக்கும் துணிக் குடைகளானது யானையின் பிரம்மாண்டமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

வானவேடிக்கை போட்டி[தொகு]

இந்த திருவிழா வல்லாங்கி மற்றும் நெம்மாரா ஆகிய இரு தேசங்களுக்கிடையேயான வான வேடிக்கை போட்டி போன்று நடத்தப்படுகிறது,இங்கு நடத்தப்படும் பட்டாசு வான வேடிக்கை கேரளாவின் பண்டிகைகளில் மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்கும் திருவிழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். இது வேலா திருவிழாவில் ஒரு வித உணர்வை உருவாக்குகிறது. திருவிழாவின் அழகை ரசிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்ோள்கள்[தொகு]

  1. "Nemmara - Vallanghy Vela on April 3rd - India Travel Forum". IndiaMike.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  2. "Nemmara-Vallangi Vela celebrated". 3 April 2012. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/nemmaravallangi-vela-celebrated/article3275423.ece. பார்த்த நாள்: 13 July 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நென்மாரா_வல்லங்கி_வேலா&oldid=3585268" இலிருந்து மீள்விக்கப்பட்டது