அதியன் பாறை அருவி
தோற்றம்
| அதியன் பாறை அருவி | |
|---|---|
அதியன் பாறை அருவி, குரும்பலங்கோடு, நிலம்பூர், மலப்புறம் மாவட்டம், கேரளம் | |
![]() | |
| அமைவிடம் | குரும்பலங்கோடு, நிலம்பூர், மலப்புறம், கேரளம் |
| ஆள்கூறு | 11°21′16″N 76°12′12″E / 11.3544°N 76.2033°E |
| ஏற்றம் | 166.74 |

அதியன்பாறை அருவி (Adyanpara Falls) இந்தியாவின் கேரளா மாநிலத்தின், மலப்புறம் மாவட்டத்தின் நிலம்பூர் தாலுக்காவில் இருக்கும் குறும்பலங்கோடு கிராமத்தில் அருவியாகக் கொட்டுகிறது.[1][2][3][4]
விவரங்கள்
[தொகு]நிலம்பூர் நகரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. கண்ணுக்கினிய அழகிய இடமாக அமைந்து கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. ஒரு பருவகால நீர்வீழ்ச்சியாக, கோடை காலத்தில் நீர் ஓட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே கோடைக்காலத்தில் இவ்வருவியைச் சுற்றிப்பார்க்க வருகை தருவது பரிந்துரைக்கப்படுவதில்லை.[5] பாறை மீது விழும் இந்த நீர்வீழ்ச்சியின் வீழ்ச்சியானது இயற்கையாக அடுத்தடுத்து விழும் தொடர் போல எழிலாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Adyanpara Waterfall | DTPC". DTPC malappuram (in ஆங்கிலம்). Retrieved 2026-07-26.
- ↑ "Adyanpara Waterfalls | Tourist Places in Malappuram". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-07-26.
- ↑ "Loading..." www.avathi.com. Retrieved 2026-07-26.
- ↑ "Adyanpara Waterfalls near Nilambur in Malappuram | Kerala Tourism". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-07-26.
- ↑ Adyanpara Waterfalls Nilambur, A day worth visiting
