பூவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவார்
പൂവാർ
Town
Poovar beach
Poovar beach
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்Thiruvananthapuram
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-20

பூவார் (Puvar) என்பது தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்த கிராமம் திருவனந்தபுரத்தின் தெற்கு முனையில் உள்ள  அடுத்த கிராமமான போழியூரைக்  குறிக்கிறது. இந்த கிராம கடற்கரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது.

மாநில அரசு அலுவலகங்கள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூவார்
  •  உப பதிவாளர் அலுவலகம், பூவார்
  •  கிராம அலுவலகம், பூவார்
  •  வேளாண்மை அலுவலகம், பூவார்
  •   அரசு மருத்துவமனை,பூவார்
  •  அரசு. ஆயுர்வேத மருத்துவமனை, பூவார்
  •  மீன்வள அலுவலகம், பூவார்
  •  அரசு மேல்நிலைப்பள்ளி பூவார்
  •  தீ மற்றும் மீட்பு அலுவலகம், பூவார் 
  • வட்டார காவல்  அலுவலகம், பூவார்

புவியியல் அமைப்பு[தொகு]

இயற்கை வனப்பகுதியில் உள்ள விழிஞ்ஞத்துக்கு மிக அருகில் பூவார் அமைந்து உள்ளது. இவ்வூர் கடலோரமாக அமைந்து உள்ளது. 56 கி.மீ நீளமுள்ள நெய்யார் ஆறு நெய்யாற்றிங்கரை வட்டம் வழியாக, பூவார் அருகே உள்ள அரபிக் கடலைச் சென்றடைகிறது. அதன் இயற்கை சூழலால் இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

வரலாறு[தொகு]

பூவார், மரங்கள், சந்தனம், தந்தம் மற்றும் வாசனைப் பொருள்களின் வர்த்தக மையமாக இருந்தது. சுமார் கி.மு. 1000 ஆம் ஆண்டில், இசுரேலின் அரசராகிய சாலொமோனுக்கு சொந்தமான கப்பல்கள் ஓபீரில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது, இது பூவார் குறித்த சில ஆதாரங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதே சமயம் இக்கிராமம்  இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதியான பண்டைய இசுலாமியக் குடியிருப்புகளில் ஒன்றாகும். பூவாரில் உள்ள மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி எட்டாவது நூற்றாண்டு முஸ்லீம் பிரசங்கியான மாலிக் தீனரால் கட்டப்பட்டது.  ஆராய்ச்சியாளரான மெகஸ்தெனஸ், உரோம எழுத்தாளரான மூத்த பிளின்னி மற்றும் வெனிஸின் பயணியான கிரீஸ் மற்றும் ரோமை சார்ந்த மார்க்கோ போலோ போன்றோர் பூவார் சோழப் பேரரசின் ஆட்சியில்,  ஒரு பெரிய துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

18-ஆம் நூற்றாண்டில் பூவாரில் உள்ள கல்லாரிக்கல் தாரவாட் என்று அழைக்கப்படும் ஒரு இல்லத்தில் போக்கு மூசா மரைக்கர் வசித்து வந்தார். இவர் பல முறை மார்த்தாண்ட வர்மா (1706-58), திருவிதாங்கூர் மன்னர் தனது எதிரிகளிடமிருந்து தப்பித்து அடைக்கலமாக இவ்வில்லத்தில் வாழ இடமளித்தார். அந்த நேரத்தில் சர்வதேச சந்தையுடன் வர்த்தக உறவுகளையும் நன்கு பயிற்சி பெற்ற இராணுவத்தையும் சில கப்பல்களையும் பூவார் கொண்டிருந்தது. கொளச்சலிலும் காயகுளம் போரிலும் இந்த படைகள் திருவாங்கூர்-டச்சு போரின்போதும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக திருவாங்கூர் இராணுவத்திற்கு உதவியது.

மார்த்தாண்ட வர்மா தொடர்பான கதையே "பூவார்" என்ற பெயரின் தோற்றமாகும். அதற்கு முன்னர் இது போக்குமூசாபுரம் என்று அழைக்கப்பட்டது. திருவாங்கூரின் உள்நாட்டுக் கலவரங்களின்போதும், எட்டுவெட்டி பிள்ளைமாரிடம் (எட்டு வீடுகளின் பிரபுக்கள்) இருந்து தப்பித்துக்கொண்டபோதும் ராஜா பூவாரை அடைந்தார். இது  நெய்யாரின் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களில் மலர்கள் நிறைந்த ஒரு வசந்த கால பருவமாகும். இந்த மலர்கள் ஆற்றில் உதிர்ந்த. இனிமையான காட்சியைப் பார்த்தபின்னரே, மார்த்தாண்ட வர்மா இது பூவார் எனக் கூறினார், இது "மலர்" மற்றும் "நதி" க்கான மலையாள சொற்களின் இணைப்பு"ஆகும்.[1]

போக்குவரத்து[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் - 30 கி.மீ.,

அருகில் உள்ள ரயில் நிலையம்: திருவனந்தபுரம் மத்திய  ரயில் நிலையம்-30 கிமீ,

நெமோம் - 20 கி.மீ., நெய்யிட்டிங்கரா - 10 கி.மீ.

அருகில் உள்ள துறைமுகம்: விழிஞ்சம் - 14 கி.மீ.

பார்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவார்&oldid=3731234" இலிருந்து மீள்விக்கப்பட்டது