நேப்பியர் அருங்காட்சியகம்
Jump to navigation
Jump to search
இந்திய நாட்டின் கேரள மாநிலம் திருவனந்தபுர நகரத்தில் உள்ளது நேப்பியர் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் 1855ல் உருவாக்கப்பட்டது. 1874ல் இந்த அருங்காட்சியகத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. இதற்கு சென்னை மாகணத்தின் ஆளுநராக இருந்த நேப்பியர் பிரபுவின் (1866 - 1872) பெயர் சூட்டப்பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியின் அரிய தொகுப்புகள், வெங்கலச் சிலைகள், பழங்கால நகைகள், யானைத்தந்த சிற்பங்கள் மற்றும் பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் Napier Museum என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |