இந்திய சமயங்களில் விலங்குரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமணக் கோயிலில் காணப்படும் இச்சிற்பத்தில் "அகிம்சையே தலையாய அறம்" என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்து, சமணம், மற்றும் பௌத்தம் உள்ளிட்ட இந்தியச் சமயங்களில் விலங்குரிமை பற்றிய சிந்தனைகள் இச்சமயங்களின் அடிப்படைத் தத்துவமான அகிம்சைக் கோட்பாட்டிலிருந்து எழுகின்றன.[1][2]

மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஆன்மாவைக் கொண்டிருக்கின்றன என்று இந்து சமயம் கூறுகிறது. இதன்படி உணர்திற உயிரினங்கள் இறந்த பின்னர் மீண்டும் மனிதனாகவோ அல்லது வேறு விலங்காகவோ மறுபிறவி எடுக்க வல்லவை என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.[3] இந்த நம்பிக்கைகளின் விளைவாக இந்துக்கள் பலரும் சைவ உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். அகிம்சைக் கோட்பாட்டினைக் இந்து சமயத்தைக் காட்டிலும் கடுமையாக எடுத்துரைக்கும் சமணக் கோட்பாடு சைவ உணவுமுறையை முற்றிலும் கட்டாயமாக ஆக்குகிறது.[3] இந்து, சமண மதங்களைப் போலவே மகாயான பௌத்தமும் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்வதால் மஹாயான பௌத்தர்களும் சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.[4]

இந்து மதம்[தொகு]

அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் ஒரு பகுதி வாழ்வதாகவும் அதுவே ஆத்மா என்று அழைக்கப்படுவதாகவும் இந்து மதம் போதிக்கிறது.[5] இதன் காரணமாகவே விலங்குகள் புனிதமாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று இந்துக் கோட்பாடுகள் கற்பிக்கின்றன.[5]

இந்து மதத்தில் புலி, யானை, எலி என பலதரப்பட்ட விலங்குகளும் போற்றப்படுகின்றன. குறிப்பாக, பசு இறையின் உருவாகப் போற்றப்படுகிறது.[4]

அனைத்து உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டுமென்பது காந்தியடிகளின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். அவர் விலங்குப் பரிசோதனையையும் விலங்கு வன்கொடுமையையும் எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

சமண மதம்[தொகு]

கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ஜைன சமூகங்களும் காயமுற்ற விலங்குகளையும் ஆதரவற்ற விலங்குகளையும் பராமரிப்பதற்காக விலங்கு மருத்துவமனைகளை நிறுவியுள்ளன.[4] சமணர்கள் பலரும் வதைகூடங்களிலிருந்து விலங்குகளை மீட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[4]

பௌத்த மதம்[தொகு]

"நாம் மற்றவர்களுக்குத் துன்பங்களை தராதிருந்தால் மட்டுமே நாம் துன்பத்திலிருந்துத் தப்பிக்க முடியும்" என்று மஹாயான பௌத்தம் போதிக்கிறது. இதன் விளைவாக மகாயான பௌத்தர்கள் சைவ உணவுமுறையினைக் கடைபிடிப்பவர்களாக உள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grant, Catharine (2006) (in en). The No-nonsense Guide to Animal Rights. New Internationalist. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781904456407. https://archive.org/details/nononsenseguidet0000gran. "These religions emphasize ahimsa, which is the principle of non-violence towards all living things. The first precept is a prohibition against the killing of any creature. The Jain, Hindu and Buddhist injunctions against killing serve to teach that all creatures are spiritually equal." 
  2. "Animal rights" (in ஆங்கிலம்). BBC. Archived from the original on 8 March 2021. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019. The main reason for Hindu respect for animal rights is the principle of ahimsa. According to the principle of ahimsa, no living thing should be harmed. This applies to humans and animals. The Jains' belief system takes the principle of ahimsa regarding animals so seriously that as well as being strict vegetarians, some followers wear masks to prevent them breathing in insects. They may also sweep paths with a small broom to make sure they do not tread on any living creatures.
  3. 3.0 3.1 Owen, Marna A. (2009) (in en). Animal Rights: Noble Cause Or Needless Effort?. Twenty-First Century Books. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780761340829. https://archive.org/details/animalrightsnobl0000owen/page/12. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Grant, Catharine (2006) (in en). The No-nonsense Guide to Animal Rights. New Internationalist. பக். 22–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781904456407. https://archive.org/details/nononsenseguidet0000gran. 
  5. 5.0 5.1 Gibson, Lynne (2002) (in en). Hinduism. Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780435336196. https://archive.org/details/hinduism0000gibs_q9z4.