குணபத்திரர் (பௌத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குணபத்திரர்
பிறப்புகிபி 394
இறப்புகிபி 468
தேசியம்இந்தியா
பணிமகாயான பௌத்த பிக்கு

குணபத்திரர் (Gunabhadra (394–468) இந்தியாவின் மகத நாட்டில் பிறந்த மகாயான பௌத்த பிக்குவும், சமஸ்கிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் 435-இல் குணவர்மன் என்பவருடன் தென் சீனாவிற்கு கடல் வழியாக பயணித்து, சீனப் பேரரசர் வென் லீயு சாங் என்பவரை சந்தித்தார். சீனப் பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் மகாயாண சூத்திரங்களை சமஸ்கிருத மொழியிலிருந்து, சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கினார்.[1] மேலும் இவர் சம்யுக்த ஆகம சூத்திரங்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Guṇabhadra, 394-468. "Buddhist Sutra "Bimashōkyō"". World Digital Library.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணபத்திரர்_(பௌத்தம்)&oldid=3792871" இலிருந்து மீள்விக்கப்பட்டது