புத்தர் தங்கியிருந்த இடங்கள்
Jump to navigation
Jump to search
கௌதம புத்தர் பிறந்த, வளர்ந்த, ஞானம் அடையத் தவமிருந்த, அடைந்த ஞானத்தை பிக்குகள், பிக்குணிகள் மற்றும் பொது மக்களிடம் உபதேசம் செய்த இடங்கள், இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடங்களின் பட்டியல்:
- லும்பினி தோட்டம்: புத்தர் பிறந்த இடம், கபிலவஸ்து, நேபாளம்
- கபிலவஸ்து: புத்தர் வளர்ந்த இடம்
- புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம், பிகார், இந்தியா
- வாரணாசி :
- சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம்.
- சிராவஸ்தி நகரத்தில் அனாதபிண்டிகன் அமைத்த ஜேடவனத்தில் புத்தர் அடிக்கடி தனது சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் இடம். இவ்விடத்தில் புத்தர் தாம் இறப்பதற்கு முன் இருபது ஆண்டுகள் தங்கியிருந்த்தார்.[1]
- ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம். ராஜகிரகத்தில் சங்கம் அமைத்து நெடுங்காலம் தங்கினார்.
- சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்.
- வைசாலி நகரம்: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம்.
- பவா நகரம்: கௌதம புத்தர் சுந்தன் அளித்த உணவை உண்ட இடம்
- குசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம்.[2]