நாகார்ச்சுனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகார்ஜுனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாகார்ச்சுனர்
నాగార్జున
ஸ்காட்லான்டில் சாம்யே லிங் துறவி மடத்தில் நாகார்ஜுனரின் தங்க உருவச்சிலை
பிறப்புஅண். கிபி 150
தென்னிந்தியா[1]
இறப்புஅண். கிபி 250
இந்தியா
பணிபௌத்த ஆசிரியர், மெய்யியலாளர்
அறியப்படுவதுமகாயாண பௌத்தத்தின் மத்தியமிகம் பள்ளியை நிறுவியவர்
சமயம்பௌத்தம்

நாகார்ச்சுனர் (Nāgārjuna, தெலுங்கு: నాగార్జున, அண். கிபி 150 – 250) மகாயான பௌத்தப் சமயப் பிரிவில் மாத்யமக பள்ளியை நிறுவிய இந்திய மெய்யியலாளர் ஆவார். குமாரஜீவர் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பாளி அல்லது பௌத்த கலப்பு சமற்கிருதம் உபயோகிக்காமல் தூய சமற்கிருதத்தை தமது நூல்களில் உபயோகப்படுத்தியுள்ளார். அவர் தமது சீடரான ஆரியதேவருடன் கூடி ப்ரஜ்ஞா பரமித (அதாவது பரிபூரண ஞானம்) சூத்திரங்களின் தத்துவத்தை வளர்த்ததற்காகவும், நாலந்தா பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஜப்பானில் புத்தமதத்தின் ஜோடோ ஷின்ஸூ பிரிவில் அவர் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார்.

புகழ் பெற்ற இவரது சீடர்களில் ஒருவர் ஆரியதேவர் ஆவார்.

வரலாறு[தொகு]

அவருடைய படைப்புகளைப் படிப்பதிலிருந்து, நாகார்ஜூனா பல நிக்காயா பள்ளித் தத்துவங்கள் மற்றும் மஹாயானா பாரம்பரிய விஷயங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவராகத் தெரிகிறது. இருந்தபோதும், நிக்காயா பள்ளியுடனான இணைப்பில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக, நடைமுறையில் இதன் முக்கியத்துத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய தத்துவங்கள் மஹாயான விதிக்கு எதிரான கருத்தைக் கொண்டது, மேலும் அவர் மஹாயான வாசகங்களுக்குத் தெளிவான குறிப்புகளை உருவாக்கும்போது வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டே செயல்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

தத்துவங்களில் கூறப்பட்டதைப் போல புத்தரின் போதனைகளின் விளக்கங்களை நடைமுறைப்படுத்த விரும்பியதன் காரணமாகவே நாகார்ஜூனா இந்த நிலையை அடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நாகார்ஜூனாவின் பார்வையில் புத்தர் சாதாரண முன்னோடியாக மட்டுமல்லாமல், மத்யமாகா அமைப்பை நிறுவிய முன்னோடியாகவும் இருக்கிறார்.[2] டேவிட் கலுப்பஹானாவின் பார்வையில் நாகார்ஜூனா ஒரு மைய-வழிப் போராளியாகவும், மோகாலிபுட்டா-டிசா வெற்றியாளராகவும், மற்றும் புத்தரின் நேர்த்தியான தத்துவக் கருத்துக்களை உயிர்பெறச் செய்தவராகவும் தென்படுகிறார்.[3]

படைப்புகள்[தொகு]

நாகார்ஜூனாவைக் குறித்துப் பல வாசகங்கள் இருக்கின்றன, இருந்தபோதும் அவைகளில் பெரும்பாலானவை பின்னர் வந்த நூலாசிரியர்களால் எழுதப்பட்டது. முலமத்யமகாகாரிகா (மைய வழியின் அடிப்படைச் செய்யுள்கள்) நாகார்ஜூனாவின் படைப்பு என்பதை அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர், மேலும் முலமத்யமகாகாரிகா அவர் சிந்தனையின் இன்றியமையாமையை இருபத்தேழு சுருக்கமான அத்தியாயங்களைக் கொண்டு விவரிக்கிறது. லின்ட்னெரின்[4] கூற்றின்படி, நாகர்ஜூனாவால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பின்வருமாறு:

  • முலமத்யமகா-காரிகா (மைய வழியின் அடிப்படைச் செய்யுள்கள்)
  • சூன்யதசாப்ததி (வெறுமை நிலையின் எழுபது செய்யுள்கள்)
  • விக்ரஹவியாவர்தனி (விவாதங்களின் முடிவு)
  • வைதல்யபிரகாரா (வகைகளைத் தூளாக்குதல்)
  • வியாவரசித்தி (உடன்படிக்கையின் ஆதாரம்)
  • யுக்திகா (விவாதத்தின் அறுபது செய்யுள்கள்)
  • கேதஸ்தவா (நிச்சயிக்கப்பட்ட உண்மையின் பாசுரம்)
  • ரத்னாவலி (விலையுயர்ந்த மலர்மாலை)
  • பிரதியசமுத்பததயாகாரிகா (விழிப்புணர்வின் இன்றியமையாமை)
  • சூத்ரசமுக்கயா
  • போதிசித்தவிவாரவா (மனத்தின் அறியாமையை விளக்குதல்)
  • சுலேக்கா (ஒரு நல்ல நண்பர்)
  • போதிசபரா (அறிவு புகட்டுதலின் இன்றியமையாமை)

நாகார்ஜூனாவின் படைப்புகள் அவருக்குத் தனிச்சிறப்பை அளித்தன, அவற்றுள் சில உண்மையாகவும் மற்றும் போலியாகவும் இருக்கலாம். குறிப்பாக, பல முக்கியமான புத்தமத இரகசியப் படைப்புகள் (மிகவும் குறிப்பாக பன்ககர்மா அல்லது “ஐந்து நிலைகள்”) நாகார்ஜூனா மற்றும் அவரின் சீடர்களுக்குத் தனிச்சிறப்பை அளிக்கிறது. இந்தப் படைப்புகள் அனைத்தும் பின்னர் வந்த காலத்தில் குறிப்பிடத்தக்க முறையில் புத்தமத வரலாற்றில் (எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர்) சேர்க்கப்பட்டது.

மஹாபிரஜ்னபரமிட்டோபதீசா என்பது பெரிய பிரஜினபரமிதாவின் மிகச்சிறந்த விளக்கவுரை என்பதுடன், நாகார்ஜூனாவின் உண்மையான படைப்பு அல்ல என்று லின்ட்னெர் கருதினார். குமரஜீவாவினால் இது சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. மஹாபிரஜ்னபரமிட்டோபதீசா நாகார்ஜூனாவின் படைப்பா அல்லது வேறொருவரின் படைப்பா என்ற பெரிய விவாதம் நடைபெற்று வருகின்றது. மேலும் இது சர்வஸ்திவதா பள்ளியைச் சார்ந்த வட இந்திய பிக்சுவின் படைப்பு என்றும், பின்னர் அந்தப் பிக்சு மஹாயானாவிற்கு மாறினார் என்றும், மூன்றில் ஒரு பங்கு உபதேசத்தைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்த எடியென் லாமோட்டி என்பவர் கருதினார். மஹாபிரஜ்னபரமிட்டோபதீசா தென்னிந்தியரின் படைப்பு என்றும், நாகார்ஜூனா அந்தப் படைப்பின் நூலாசிரியராக இருக்க வாய்ப்புள்ளதாக சீன அறிஞரும்-துறவியுமான இன் சுன் என்பவர் கருதினார். உண்மையில் இந்த இரண்டு பார்வைகளும் எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் தென்னிந்தியாவைச் சார்ந்த நாகார்ஜூனா வட சர்வஸ்திவதாவில் சிறப்பாகப் படித்திருக்கலாம். ஒருவேளை அவர்கள் இருவரும் கருதியதைப் போல அது மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் குமரஜீவாவினால் படைக்கப்பட்டிருக்கலாம்.

தத்துவம்[தொகு]

இந்தியாவின், குல்லுவிற்கு அருகில் உள்ள திபெத்திய துறவிமடத்தில் நாகார்ஜூனாவின் உருவச்சிலை.

நாகார்ஜூனாவின் படைப்பான சூன்யதா அல்லது “வெறுமை நிலை” புத்தமதத் தத்துவத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, அதே சமயம் அனத்மேன் (சுயநலமின்மை) மற்றும் பரதித்யசமுத்பதா (பிறப்பிடத்தைச் சார்ந்தது), சர்வஸ்திவாத மற்றும் சாட்ரன்திகாவின் (நடைமுறையில் இல்லாத மஹாயானாவைச் சாராத பாடசாலைகள்) போன்ற மனோதத்துவ நூல்கள் சூன்யதா கருத்துக்கள் தவறானவை என்று வலியுறுத்துகின்றன. அனைத்து அற்புதங்களும் எந்த ஒரு ஸ்வபவவும் இல்லாமல், ஏட்டில் உள்ளவாறே “சுய இயல்பு” அல்லது ”சுய தன்மையுடன்” இருப்பதோடு, எந்த ஒரு அடிப்படை உட்பொருளும் அன்றி காணப்படுகிறது என்ற கருத்தை சூன்யதா வலியுறுத்துகிறது; மேலும் சூன்யதா நடைமுறையில் வெறுமை நிலை என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது; ஆகவே அந்தச் சமயத்தில் வலம் வந்த ஸ்வபவவின் கோட்பாடுகள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறானவை என்று முந்தைய புத்தமதக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது. நேரடியான (முடிவானது) உண்மை மற்றும் மரபைச் சார்ந்த உண்மை ஆகிய இரண்டு உண்மைநிலைகளை நாகார்ஜூனா புத்தமதத்தின் அடிப்படையில் வலியுறுத்தினார் என்பதுடன், பொதுவாக அவைகள் பின்னர் வந்த மஹாயான படைப்புகளில் உபாயா என்றழைக்கப்பட்டது. காக்காயனாகோட்டா சுத்தாவில் கண்டறிந்த இந்தக் கோட்பாடுகளை நாகார்ஜூனா திருத்தம் செய்தார், மேலும் அந்தக் கோட்பாடுகள் நித்ரதா (தெளிவான) மற்றும் நேயர்தா (தெளிவற்ற) விதிகளை வேறுபடுதுகிறது.

மொத்தத்தில் காக்காயனாவின்படி, இந்த உலகம் உண்மை நிலை மற்றும் உண்மையற்ற நிலை ஆகிய இரண்டு வேறுபட்ட கொள்கைகளால் இயக்கப்படுகிறது. ஒருவர் உலகின் பிறப்பிடத்தை சரியான முறையில் பகுத்தறிவைக் கொண்டு ஆராயும்போது, உலகத் தொடர்புடன் கூடிய ‘உண்மையற்ற நிலை’ அருவருக்கு ஏற்படுவதில்லை. ஒருவர் உலகின் முடிவை சரியான முறையில் பகுத்தறிவைக் கொண்டு ஆராயும்போது, உலகத் தொடர்புடன் கூடிய ‘உண்மை நிலை’ அருவருக்கு ஏற்படுவதில்லை.
காக்காயனாவின்படி இந்த உலகம் பற்றுதல், கொள்கைப் பிடிப்பு (வாழ்வாதாரம்), மற்றும் தவறான எண்ணம் ஆகியவற்றில் கட்டுண்டுள்ளது. சந்தேகம் எப்பொழுது எழுகிறதோ, அது எழுந்ததே; மன அழுத்தம் எப்பொழுது கடந்து போகிறதோ, அது கடந்து போனதே. இதிலிருந்து நாகார்ஜூனாவின் அறிவு மற்றவரைப் போல அல்லாமல் தற்சார்பானதாக இருப்பது தெரிகிறது. அவரின் இந்த அறிவு காக்காயனாவின் சரியான பார்வையைத் தெளிவாக்குகிறது.
“‘அனைத்தும் உண்மை நிலை’: இது ஒரு அளவானது. ‘அனைத்தும் உண்மையற்ற நிலை’: இது மற்றொரு அளவிலானது. இந்த இரண்டு அளவுகளைத் தடுப்பதற்கு, தாகாத்தா மையத்தின் வழியாக தம்மாவை போதிக்கிறது...”[5]

நாகார்ஜூனா சாம்விர்தி (மரபு வழியில் உண்மை) மற்றும் பரமார்தம் (அடிப்படை உண்மை) ஆகியவற்றிற்கு இடையே கற்பித்தலை வேறுபடுத்துகிறார், ஆனால் அவர் முறைப்படுத்தப்பட்ட எந்தக் கோட்பாட்டுக் கருத்துக்களையும் பின்னர் வந்த பிரிவில் சேர்க்கப்படுவது பற்றித் தெரிவிக்கவில்லை. அவரைப் பொருத்த வரை முடிவாக, ||7

சிந்தனையின் அளவை நிறுத்தும்போது, வடிவமைக்கப்படுவது நிறுத்தப்படும்,
வீடுபேற்று நிலையைப் போல வியத்தகு நிகழ்ச்சியானது தோன்றாது என்பதுடன், நிறுத்தவும் இயலாது.

இது அவருடைய டெட்ரலேமாவில் பொருத்தமான கூற்றுகளுடன் விவரிக்கப்படுகிறது:

எக்ஸ் (உறுதிமொழி)
எக்ஸ் அல்லாதது (மறுப்பு)
எக்ஸ் மற்றும் எக்ஸ் அல்லாதது (இரண்டும்)
எக்ஸ் அல்லது எக்ஸ் அல்லாத இரண்டுமற்றது (இரண்டுமற்றது)

மேலும் நாகார்ஜூனா சிந்தனையின் கோட்பாட்டைக் கற்பித்திருக்கிறார். உண்மை நிலையின் சுருக்கமானது சிந்தையின் நீளத்துடனான உறவில் இருக்கிறது என்ற உதாரணத்தை அவர் ரத்னாவலியில் தெரிவிக்கிறார். ஒரு செய்தி அல்லது காட்சிப் பொருளின் முடிவானது முரண்பாடுகளின் வழியிலான மற்ற செய்திகள் அல்லது காட்சிப் பொருள்களின் உறவினால் மட்டுமே சாத்தியமாகும். சிந்தனையின் சுருக்கம் மற்றும் நீளம் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுமுறையானது இயற்கையில் (ஸ்வபவ) உள்ளார்ந்த காரணத்தினால் அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும் இந்தச் சிந்தனையானது பாலி நிக்காயா மற்றும் சீன ஆகமாவில் கண்டறியப்பட்டது என்பதுடன், அவை இரண்டிலும் சிந்தனையின் உறவுமுறை பின்வருமாறு விவரிக்கப்படுகிறது: “உண்மையில் எது வெளிச்சத்தின் மூலப்பொருளாகக்... கருதப்படுகிறது என்றால் இருளே [உறவு முறையில்] ஆகும்; உண்மையில் எது நன்மையின் மூலப்பொருளாகக் கருதப்படுகிறது என்றால் தீமையே ஆகும்; அதே போல உண்மையில் எது வெற்றிடத்தின் மூலப்பொருளாகக் கருதப்படுகிறது என்றால் உருவமே ஆகும்.”[6]

நாகார்ஜூனாவின் தத்துவங்களை அதிகமாகத் தெரிந்துகொள்வதற்காக, முலமத்யமகாகாரிகாவைப் பார்க்கவும்.

ஆயுர்வேத மருத்துவராக நாகார்ஜூனா[தொகு]

நாகார்ஜூனா ஆயுர்வேதம், அல்லது இந்தியப் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக இருந்தார். சுஸ்ருதா சம்ஹிதா (அவர் அதன் பதிப்பைத் தொகுப்பவராக இருந்தார்) என்ற சமஸ்கிருத மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் அவரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இரத்த ஓட்ட அமைப்பு மற்றும் இரத்த திசுவைப் (ரக்தா தத்து என்று தனிச்சிறப்புடன் வரையறுக்கப்படுகிறது) பற்றி அவர் தெளிவாக விவரித்துள்ளதைப் போல, அவரின் பல கருத்தாக்கங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. பஸ்மாஸ் எனப்படும் தாதுக்களைக் குறிப்படத்தகுந்த முறையில் சிகிச்சையளித்து சரிசெய்தது அவரின் முன்னோடியான வேலையாகக் கருதப்படுவதுடன், அது அவருக்கு "மருத்துவ இரசாயனத்தின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. மேலே வரையறுக்கப்பட்ட அனைத்தும் ஃபிராங்க் ஜான் நினிவாகியால் அவருடைய பின்வரும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது: ஆயுர்வேதம்: எ காம்ப்ரிஹென்சிவ் கைட் டு டிரெடிஷனல் மெடிசின் ஃபார் தி வெஸ்ட் , பக்கம். 23. (பிராகெர்/கிரீன்வுட் பதிப்பகம், 2008). ஐஎஸ்பிஎன் 978-0-313-34837-2.

உருவ விளக்கம்[தொகு]

நாகார்ஜூனா மனித மற்றும் நாகத்தின் சிறப்பியல்புகளைக் கொண்ட கலப்பிலான வடிவத்தில் சித்தரிக்கப்படுகிறார். அந்த நாகத் தோற்றத்தின் வடிவமானது அரியாசனம், கிரீடம் மற்றும் அவரின் மனிதத் தலைக்குக் கேடயமாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்த நாகத்தின் வடிவமானது இந்திய மதக் கலாச்சாரம் முழுவதிலும் காணப்படுகிறது என்பதுடன், அதுவே மழை, ஏரிகள் மற்றும் நீரின் மற்ற வடிவத்திற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. புத்தமதத்தில் நாகம் என்பது அறத்தினை உணர்வது என்ற பொருளைக் குறிப்பிடுகிறது, அல்லது பொதுவாக அறிவுள்ள நபரைக் குறிப்பிடுகிறது. மேலும் அந்த வார்த்தையானது “யானையையும்” குறிப்பிடுகிறது.

ஆங்கில மொழிபெயர்ப்புகள்[தொகு]

முலமத்யமகாகாரிகா[தொகு]

இதர பணிகள்[தொகு]

ஆசிரியர் தலைப்பு பிரசுரிப்பவர் குறிப்புகள்
லின்ட்னெர், சி நாகார்ஜூனா மோதிலால், 1987 [1982] சமஸ்கிருதம் அல்லது திபெத்திய வாசகங்களைக் கொண்டுள்ளது என்பதுடன், சூன்யதசாப்ததி, வைதல்யபிரகர்னா, வியாவரசித்தி (துண்டுகள்), யுக்திசஸ்திக, கதுஸ்தவ மற்றும் போதிசித்தவிவாரனா ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ளது. போதிசம்பர்காவின் மொழிபெயர்ப்பையும் கொண்டுள்ளது. விக்ரஹவியாவர்தனிக்காக சமஸ்கிருதம் மற்றும் திபெத்திய வாசகங்கள் அளிக்கப்படுகின்றன. கூடுதலாக சூத்ரசமுக்கயாவிற்காக சூத்திர ஆதாரத்தின் ஒரு அட்டவணை வழங்கப்படுகிறது.
கோமிதோ, டி ஆர் நாகார்ஜூனாவின் "எழுபது செய்யுள்கள்" ஸ்னோ லயன், 1987 திபெத்திய விரிவுரையுடன் கூடிய சூன்யதசாப்ததியின் மொழிபெயர்ப்பு
பட்டாச்சார்யா, ஜான்ஸ்டன் மற்றும் குன்ஸ்ட் நாகார்ஜூனாவின் சொற்போர் முறை மோதிலால், 1978 விக்ரஹவியாவர்தனியின் சிறந்த மொழிபெயர்ப்பு
கவமுரா, எல் விலைமதிப்பற்ற இளங்காற்று தர்மா, 1975 திபெத்திய விரிவுரையுடன் கூடிய சுர்லேகாவின் மொழிபெயர்ப்பு
ஜேமிசன், ஆர்.சி. உயர்ந்த வாகனம் மற்றும் பிறப்படத்தைச் சார்ந்த மையத்தைப் பற்றிய நாகார்ஜூனாவின் செய்யுள் டி.கே., 2001 மஹாயனவிம்சிகா மற்றும் பிரதித்யசமுத்பதஹர்தயகாரிகாவின் திருத்தப்பெற்ற திபெத்திய பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்டவை சீனாவின், கன்சு, டன்ஹூனாங்கில் உள்ள கோயிலின் குகையிலிருந்து பெறப்பட்ட வாசகங்களாகும்
லின்ட்னெர், சி. விவேகத்தின் குரு:

புத்தமத குரு நாகார்ஜூனாவின் படைப்புகள்

தர்மா, 1986 மத்யமிகாவிற்குச் சிறந்த அறிமுகமாக விவேகத்தின் குரு என்ற நூல் புத்தரைப் புகழும் இரண்டு துதிப்பாடல்கள், சூன்யதாவின் இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வின் தொடர்பு, தியானம், மற்றும் நன்னெறி நடத்தை ஆகியவற்றைக் உள்ளடக்கியது. நடைமுறையிலுள்ள சமஸ்கிருதத்தின் எழத்துப் பெயர்ப்பு மற்றும் முக்கியமான பதிப்புகளில் திபெத்திய செய்யுள் சேர்க்கப்பட்டுள்ளது. திபெத்திய மொழிபெயர்ப்பு (பொருளின் அடையாளம்: 0-89800-286-9)
டோலா, பெர்னான்டோ மற்றும் கார்மேன் டிராகனிட்டி வைதல்யபிரகர்னா சவுத் ஏசியா புக்ஸ், 1995
ஹாப்கின்ஸ், ஜெஃப்ரி நாகார்ஜூனாவின் விலையுயர்ந்த மலர்மாலை: வாழ்க்கை முறை மற்றும் விடுதலைக்கான புத்த மதத்தின் அறிவுரை ஸ்னோ லயன் பப்ளிகேஷன்ஸ், 2007 ஐஎஸ்பிஎன் 1852270926
பிரன்ஹோல்சி, கார்ல் தர்மததுவின் புகழ் ஸ்னோ லயன் பப்ளிகேஷன்ஸ், 2008 மூன்றாவது கர்மபாவின் விரிவுரையுடன் கூடிய மொழிபெயர்ப்பு

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kalupahana, David. A History of Buddhist Philosophy. 1992. p. 160
  2. கிறிஸ்டியன் லின்ட்னெர், மாஸ்டர் ஆப் விஸ்டம் . தர்மா பப்ளீஷிங் 1997, பக்கம் 324.
  3. டேவிட் கலுப்பஹனா, முலமத்யமகாகாரிக ஆப் நாகார்ஜூனா: தி பிளாசபி ஆப் தி மிடில் வே . மோதிலால் பனார்சிதாஸ், 2005, பக்கங்கள் 2,5.
  4. லின்ட்னெர், சி. (1982) நாகார்ஜூனா, பக்கம் 11
  5. எஸ்என் 12.15, [1]. அதை இணைக்கும் பதிப்பு ஒன்று நிக்காயாவில் கண்டறியப்பட்டது என்பதுடன், அந்தப் பதிப்பு சம்யுக்தகாமாவில் கண்டறியப்பட்ட பதிப்பிலிருந்து வேறுபட்டது. இரண்டும் நடைமுறையில் இருப்பது மற்றும் நடைமுறையில் இல்லாததன் உச்ச அளவுகளுக்கு இடையிலான மையத்தின் வழயாக கல்வி கற்பிக்கும் கருத்தைக் கொண்டுள்ளது. ஏ.கே. வார்டரின், ஏ கோர்ஸ் இன் இன்டியன் பிளாசபியைப் பார்க்கவும். மோதிலால் பனார்சிதாஸ் வெளியீடு., 1998, பக்கங்கள் 55-56, அல்லது பகுப்பாய்வுடன் கூடிய இரண்டு பதிப்புகளின் வாசகங்களைப் பார்ப்பதற்காக சூங் மன்-கியட்டின் 192-195 பக்கங்களைப் பார்க்கவும், முந்தைய புத்தமதத்தின் கற்பித்தலின் அடிப்படை: சீன சம்யுக்தகாமா மற்றும் பாலி சம்யுத்தா-நிக்காயாவின் சூத்ரங்கா பகுதியில் பொருளிலான ஒப்பீட்டுச் சிந்தனை ; ஹார்ராஸோவிட்ஸ் வெர்லாக், வேய்ஸ்பேடன், 2000. நாகார்ஜூனா பாலுணர்விற்கு எதிராகத் தன்னுடைய எம்எம்கே வில் கருத்து தெரிவிக்கும்போது, அவர் "அனைத்திற்குமான" குறி்ப்புகளை உருவாக்கவில்லை; இதன் அடிப்படையில் இருந்து டேவிட் கலுப்பஹானாவின் பார்வையில், நாகார்ஜூனா: தி பிளாசபி ஆப் தி மிடில் வே . சுனி பதிப்பகம், பக்கம் 232.
  6. டேவிட் கலுப்பஹானா, காரணம்: தி சென்ட்ரல் பிளாசபி ஆப் புத்திசம் . ஹவாய் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1975, பக்கங்கள் 96-97. நிக்காயாவில் எஸ்என் 2.150 இல் செய்தி கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புதவிகள்[தொகு]

  • Garfield, Jay L. (1995), The Fundamental Wisdom of the Middle Way. Oxford: Oxford University Press.
  • Garfield, Jay L. and Graham Priest (2003), “Nāgārjuna and the Limits of Thought”, Philosophy East and West 53 (January 2003): 1-21.
  • Jones, Richard H. (2014), Nagarjuna: Buddhism's Most Important Philosopher, 2nd ed. New York: Jackson Square Books.
  • Kalupahana, David J. (1986),The Philosophy of the Middle Way. Albany: SUNY Press.
  • Kalupahana, David J. (1992), The Principles of Buddhist Psychology, Delhi: ri Satguru Publications
  • Kalupahana, David J. (1994), A history of Buddhist philosophy, Delhi: Motilal Banarsidass Publishers Private Limited
  • Lamotte, E., Le Traite de la Grande Vertu de Sagesse, Vol I (1944), Vol II (1949), Vol III (1970), Vol IV (1976), Institut Orientaliste: Louvain-la-Neuve.
  • Mabbett, Ian, (1998, “The problem of the historical Nagarjuna revisited”, Journal of the American Oriental Society, 118(3): 332–346.
  • Murti, T. R. V. (1955), The Central Philosophy of Buddhism. George Allen and Unwin, London. 2nd edition: 1960.
  • Murty, K. Satchidananda (1971), Nagarjuna. National Book Trust, New Delhi. 2nd edition: 1978.
  • Ramanan, K. Venkata (1966), Nāgārjuna's Philosophy. Charles E. Tuttle, Vermont and Tokyo. Reprint: Motilal Banarsidass, Delhi. 1978. (This book gives an excellent and detailed examination of the range and subtleties of Nagarjuna's philosophy.)
  • Ruegg, D. Seyfort (1981), The literature of the Madhyamaka school of philosophy in India (A History of Indian literature), Harrassowitz, ISBN 978-3-447-02204-0.
  • Sastri, H. Chatterjee, ed. (1977), The Philosophy of Nāgārjuna as contained in the Ratnāvalī. Part I [ Containing the text and introduction only ]. Saraswat Library, Calcutta.
  • Streng, Frederick J. (1967), Emptiness: A Study in Religious Meaning. Nashville: Abingdon Press.
  • Tuck, Andrew P. (1990), Comparative Philosophy and the Philosophy of Scholarship: on the Western Interpretation of Nāgārjuna, Oxford: Oxford University Press.
  • Walser, Joseph (2002), Nagarjuna And The Ratnavali: New Ways To Date An Old Philosopher, Journal of the International Association of Buddhist Studies 25 (1-2), 209-262
  • Walser, Joseph (2005),Nāgārjuna in Context: Mahāyāna Buddhism and Early Indian Culture. New York: Columbia University Press.
  • Westerhoff, Jan (2010), The Dispeller of Disputes: Nāgārjuna's Vigrahavyāvartanī. Oxford: Oxford University Press.
  • Westerhoff, Jan (2009), Nāgārjuna's Madhyamaka. A Philosophical Introduction. Oxford: Oxford University Press.
  • Wedemeyer, Christian K. (2007), Āryadeva's Lamp that Integrates the Practices: The Gradual Path of Vajrayāna Buddhism according to the Esoteric Community Noble Tradition. New York: AIBS/Columbia University Press.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகார்ச்சுனர்&oldid=3804692" இலிருந்து மீள்விக்கப்பட்டது