உள்ளடக்கத்துக்குச் செல்

காத்தியாயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தியாயன மகாதேரர்
சுய தரவுகள்
பிறப்பு
உதேனி, உஜ்ஜைன் நகரம், இந்தியா
சமயம்பௌத்தம்
தேசியம்இந்தியா இந்தியன்
பெற்றோர்திரிடவச்சா - சண்டிமா
Occupationபிக்கு
பதவிகள்
Teacherகௌதம புத்தர்
மாணவர்கள்
  • சோன குடிகன்ன மகாதேரர்
தாய்லாந்து பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை

[1]

காத்தியாயனர் (Kātyāyana) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். இவரது பெயர் பல்வேறாக சமசுகிருதம், பாளீ, தாய், சிங்கள, மொழிகளில் குறிக்கப்பட்டுள்ளது. பாலி மொழியில் கச்சாயனர் அல்லது மகா கச்சாயனர் என குறிக்கப்பட்டுள்ளது.

திரிடவச்சா - சண்டிமா இணையருக்கு உச்சையினி நகரத்தில் பிறந்த காத்தியாயனர், குரு அசிதரின் குருகுலத்தில் வேத சாத்திரங்களைப் பயின்றவர். பின்னர் புத்தர் ஞானம் அடைந்த பின் அவரின் நெருங்கிய தோழராகவும், சீடராகவும் இருந்தவர்.

அவந்திதேசம், உஜ்ஜைன், மாளவம் போன்ற மத்திய இந்தியப் பகுதி மக்களை பௌத்த சமயத்திற்கு மாற்றியவர். தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் 6-இல் காத்தியாயனர், சாரிபுத்திரர், மகாகாசியபர், சுபூதி, ஆனந்தர், உபாலி, நந்தன், மௌத்கல்யாயனர் ஆகிய சீடர்களுக்கு புத்தர் தர்மம் குறித்து அருளிச் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் விகாரையில் பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை உள்ளது.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Chandra, Lokesh (2002). Dictionary of Buddhist Iconography. Biblia Impex India. pp. 1652–1653. ISBN 81-7742-049-6.
  • Keown, Damien (2003). A Dictionary of Buddhism. Oxford University Press. p. 140. ISBN 0-19-860560-9.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Lotus Sutra" (PDF). Numata Center for Buddhist Translation and Research. 2007. Retrieved 2019-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தியாயனர்&oldid=4057733" இலிருந்து மீள்விக்கப்பட்டது