கேசரியா தூபி
கேசரியா தூபி | |
---|---|
![]() கேசரியா தூபி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கேசரியா, கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 26°20′03″N 84°51′17″E / 26.334140°N 84.854762°E |
சமயம் | பௌத்தம் |
செயற்பாட்டு நிலை | பாதுகாக்கப்பட்டது. |
கேசரியா தூபி (Kesariya stupa) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கேசரியா எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு வடக்கே 107.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கௌதம புத்தர் நினைவாக கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது. [1] கேசரியா தூபி 104 அடி உயரம் கொண்டது. கேசரியா தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1998ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.[2] கேசரியா தூணின் உயரம் 104 அடியாகும்.[3]ஒரு முறை கௌதம புத்தர் கேசரியா நகரத்தில் தங்கி தனது தத்துவங்களை விளக்கியதால், இந்நகரத்தை கேசபுத்தா என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டது.[4]. தற்போது இத்தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Le Huu Phuoc, Buddhist Architecture, Grafikol 2009, pp.169-171
- ↑ http://www.buddhist-pilgrimage.com/kesaria-stupa.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.buddhist-temples.com/bihar/kesaria-stupa.html