குஜராத்தில் சமணம்
குஜராத்தில் சமணம் பல நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கை செலுத்தி வருகிறது.[1] குஜராத் மாநிலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றுபவர்கள், தங்களின் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதர், இம்மாநிலத்தில் உள்ள கிர்நார் மலையில் மோட்சம் அடைந்தார் எனக் கருதுகிறார்கள்.
கி பி ஐந்தாம் நூற்றாண்டில், சமண சமயத்தின் தலைநகரம் எனப் போற்றப்படும் பண்டைய வல்லபி நகரத்தில் சமண அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது.[2] சௌதா வம்ச மன்னர் வனராஜா ஆட்சியின் போது (கி பி 720-780), வல்லபி நகரத்தில் சமணத் துறவி சிலாகுணா சூரி தலைமையில் கூடிய துறவிகள், சமண சமயத்தின் ஒழுங்கு முறைப்பட்ட சாத்திரங்கள் தொகுக்கப்பட்டன.
வரலாறு[தொகு]
குஜராத் மாநிலம் கி பி 6-7ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணக் கோயில்கள் கொண்டிருந்தது. இக்கோயில்கள் சோலாங்கிப் பேரரசர்கள் மற்றும் இராசபுத்திர சௌதா வம்சத்தவர்கள் பேணிக்காத்தனர். [3]13-ஆம் நூற்றாண்டில் வடக்கு குஜராத் பகுதிகள், சமண சமயத்தின் முக்கிய மையமாக விளங்கியது. [4]
முதன் முதலில் குஜராத்தில் அறியப் பட்ட இலக்கியமான பரதன் – பாகுபலி இராஜா எனும் சரித்திர வரலாற்று நூலை எழுதியது ஒரு சமணத் துறவி ஆவார். குஜராத் சமண வரலாற்றில் ஆச்சாரியர் ஹேமசந்திர சூரி மற்றும் அவர் மாணவர் சோலாங்கிப் பேரரசர் குமாரபாலன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
முக்கிய சமண மையங்கள்[தொகு]
குஜராத்தில் உள்ள முக்கிய சமண மையங்கள்:
- சத்ருஞ்ஜெய மலை
- பாலிதானா
- கிர்நார்
- கோத்தரா, கட்ச் மாவட்டம்
- நல்லியா
- தரங்கா
- சோங்காத்
- அகமதாபாத்
குறிப்பிடத்தக்க சமணர்கள்[தொகு]
- விக்கிரம் சாராபாய்
- பிரேம்சந்த் ராய்சந்த்
- அமித் ஷா
- திலீப் தோஷி
- கௌதம் அதானி
- விஜய் ருபானி
- விர்ஜி வோரா
- ஆஷா பரீக்
- திலீப் சாங்வி
- கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
- சுதிர் வி. ஷா
சமணக் கோயில்கள்[தொகு]
கிர்நார் ஜெயின் கோயில்கள்
சாந்திநாதர் ஜெயின் கோயில், கோத்தரா, கட்ச் மாவட்டம்
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "Jainism". பார்த்த நாள் 21 January 2016.
- ↑ "Jainism". பார்த்த நாள் 21 January 2016.
- ↑ "Al-Hind the Making of the Indo-Islamic World". பார்த்த நாள் 21 January 2016.
- ↑ "Cultural History of India". பார்த்த நாள் 21 January 2016.
மேற்கோள்கள்[தொகு]
- Glasenapp, Helmuth Von (1999), Jainism: An Indian Religion of Salvation, Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-1376-6