கண்ணூர் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணூரைச் சேர்ந்த சமூக சேவகர் அஜிகோடன் ராகவனின் கல்லறை
பயம்பலம் கடற்கரையில் மக்கள்
பயம்பலம் கடற்கரை - பதனா தோடுவுடன் இணைதல்
முன்னாள் முதல்வர் ஈ.கே.நயனரின் கல்லறை
சாலத் சாலில் பகவதி கோயில்

கண்ணூர் கடற்கரை (Kannur Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கண்ணூர் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஐந்து கடற்கரைகளின் குழுவாகும். அவை

  1. பயம்பலம் கடற்கரை
  2. மீன்குனு கடற்கரை
  3. ஆதிகடலாய் கடற்கரை
  4. பேபி கடற்கரை
  5. தாயில் கடற்கரை

கண்ணோட்டம்[தொகு]

கனாயி குஞ்ஞிராமன் உருவாக்கிய அம்மா (தாய்) என்ற சிற்பம் கடற்கரை தோட்டத்தில் கவரும் அம்சமாகும். [1] தோட்டத்தின் ஒரு பகுதி குழந்தைகளுக்கானதாக உள்ளது. மணிரத்னத்தின் திரைப்படமான அலைபாயுதே உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த இடத்தில் படமாக்கப்பட்டுள்ளன. [2] ஏ. ஆர். ரகுமான் நடித்த வேர்ல்ட்ஸ்பேஸ் விளம்பரமும் இங்கே படமாக்கப்பட்டது.

முக்கிய நபர்களின் கல்லறைகள்[தொகு]

கண்ணூர் கடற்கரையானது கேரளத்தின் சில முக்கிய சமூகத் தலைவர்களின் கல்லறைகளுக்காக பிரபலமானது. இந்த கடற்கரைக்கு அருகே எ. கி. நாயனார், [3] சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை, ஏ. கே. கோபாலன், பாம்பன் மாதவன், சுகுமார் அழீக்கோடு, கே. ஜி. மாறார் ஆகிய தலைவர்களின் கல்லறைகள் உள்ளன. [1]

முழப்பிலங்காடு டிரைவ்-இன் பீச்[தொகு]

முழப்பிலங்காடு கடற்கரை அதன் கடினமான மேற்பரப்பு காரணமாக வாகனம் ஓட்ட பிரபலமா இடமாக உள்ளது. மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு தொடர்ந்தாற்போல ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. தலசேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான டிரைவ்-இன் கடற்கரையாகும்.

தோட்டடா கடற்கரை[தொகு]

தோட்டாடா கடற்கரை என்பது ஒரு அழகான கடற்கரை   கண்ணூருக்கு தெற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த கடற்கரை 800 மீட்டர் நீளம் கொண்டது. பல சுற்றுலா பயணிகள் இங்கு சூரிய குளியல் எடுக்க வருகிறார்கள். தோட்டாடா ஆறு கடற்கரையில் பாய்கிறது.

மீன்குன்னு கடற்கரை[தொகு]

மீன்குன்னு கடற்கரையானது அழீக்கோடு செல்லும் பாதையில் உள்ளது. இந்த கடற்கரை ஐரோப்பியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரையில் வசதிகள் இல்லை. ஒளிப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகளுக்கு இது மிகவும் பிடித்த இடம்.

புனித ஏஞ்சலோ கோட்டை[தொகு]

கண்ணூர் கோட்டை அல்லது புனித ஏஞ்சலோ கோட்டையானது கண்ணூர் நகரத்தின் தெற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோட்டை 1505 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. டச்சுக்காரர்கள் 1663 இல் கோட்டையைக் கைப்பற்றி நவீனப்படுத்தினர். 2015 ஆம் ஆண்டில், அகழ்வாய்வின் போது கோட்டையில் இருந்து கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மாப்பிளா விரிகுடா[தொகு]

மாப்பிளா விரிகுடா துறைமுகம், அரக்கல் அருங்காட்சியகம் ஆகியவை நகரத்திற்கு அருகில் உள்ளன. இந்த பகுதியில் பல அழகான பள்ளிவாசல்கள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 kannurtourism.com. "Payyambalam Beach".
  2. A Movie Watchdog. "Alaipayuthey".
  3. KRISHNAKUMAR, R (June 2004). "OBITUARY:The people's leader". Frontline (Frontline) 21 (12). http://www.flonnet.com/fl2112/stories/20040618002008900.htm. 

காட்சியகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்_கடற்கரை&oldid=3037573" இலிருந்து மீள்விக்கப்பட்டது