செம்பாளை (நெல்)
செம்பாளை |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1125 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
செம்பாளை (Sempalai) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டராத்தில் உள்ள "இடையூர்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1125 கிலோ நெல் தானியமும், சுமார் 1350 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 21 - 25 நாட்கள் நாற்றங்கால் உள்ளிட்ட 100 - 105 நாள் வயதுடைய குறுகியகால பயிரான செம்பாளை பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய இச்சம்பா பட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.[2]
வளருகை
[தொகு]நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், ஆளுயரம் வளர்ந்து, முதிர்வடையும் காலத்தில் தண்டுடைந்து சாயும் தன்மை உடையதாகும்.[1]
குறிப்புகள்
[தொகு]- செம்பாளையின் அரிசி செம்பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.[1]
- தென்னிந்திய பிரதான உணவாக கருதப்படும் இது, பொரி, மற்றும் அவல் போன்றவைகள் தயாரிக்க ஏற்றதாக உள்ளது, மேலும், பூச்சிகள், மற்றும் நோய்களிலிருந்து காத்துகொள்ளும் திறனுடையது.[3]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Sempalai". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. Retrieved 2017-02-21.
- ↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "7. Sempalai". Archived from the original on 2017-05-14. Retrieved 2017-02-22.