சூரன் குறுவை (நெல்)
சூரன் குறுவை |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
சூரன் குறுவை அல்லது சூரக் குறுவை (Sooran Kuruvai) பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பழம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், 30 - 35 நாட்கள் நாற்றங்கால் கால அளவு கொண்டதாகும். சூரன் குறுவையின் நெல் தானியமணி கரும்பழுப்பு நிறமாகவும், பெரு நயத்துடனும் காணப்படும்.[1]
பருவகாலம்[தொகு]
மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான சூரன் குறுவைக்கு, ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பட்டம் போன்ற பருவங்கள் ஏற்றதாகும். மேலும், இப்பட்டத்தில் (பருவத்தில்) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[1][2]
குறிப்புகள்[தொகு]
- சூரன் குறுவையின் அரிசியில் இட்லி, மற்றும் தோசை தயாரிக்க ஏற்றதாக உள்ளது.[3]
- சூரன் குறுவையின் ஈட்டம் (Yield), ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ.[1]
இவற்றையும் காண்க[தொகு]
![]() |
விக்சனரியில் சூரன் குறுவை என்னும் சொல்லைப் பார்க்கவும். |
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Suran Kuruvai". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. 2017-01-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "PADDY VARIETIES CONSERVED BY CIKS". 2017-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-20 அன்று பார்க்கப்பட்டது.