காளான் சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளான் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காளான் சம்பா அல்லது காலன் சம்பா (Kalan samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]

மருத்துவ குணம்

காளான் சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், மலை போன்ற அதீத உடற்பலம், பெருகுவதோடு, சில வாத ரோக(சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்கள் உள்ளன[2]) நோய்களை போக்கி சுகத்தை அளிப்பதாக கூறப்படுகிறது[3]

அகத்தியர் குணபாடம்

காளான் சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்
கேளாம லேகொடுக்கும் கேளினும் – நீளும்
அனிலத்தைப் போக்கிவிடும் ஆரோக்கி யத்தை
நனிலத்தில் செய்துவிடும் நாடு

  • பொருள்: இது உலுக்கு மலைபோன்ற உறுதியையும் நன்மயையும் உண்டாக்கும், சிற்சில வளிநோய்களை நீக்கும்.[4]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |16 Naming traditional rice varieties
  2. [1]
  3. "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
  4. ஈர்க்குச்சம்பா அரிசி |சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_சம்பா_(நெல்)&oldid=2480717" இலிருந்து மீள்விக்கப்பட்டது