ஆந்திர நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

ஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று. தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

கோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.

தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்[தொகு]

இந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள்வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது.[1] (மகாபாரதம் 2: 33)

குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்[தொகு]

குருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.[2](மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_நாடு&oldid=2226572" இலிருந்து மீள்விக்கப்பட்டது