வலைவாசல்:வைணவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்

வைணவ வலைவாசல்
.

அறிமுகம்

வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் இந்துசமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. நாளாயிர திவ்யபிரபந்தம் எனும் ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்நூலை வேதங்களுக்கு நிகராக போற்றுவதனால் இச்சமயத்திற்கு வைணவம் என்ற பெயர் எற்பட்டதாக கருத்துண்டு. உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.

வைணவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

தசாவதாரத்தில் ஒன்றான கூர்மம்
தசாவதாரம் என்பது பத்து அவதாரங்களை குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரகக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.

வைணவ அடியார்கள்

திருமகள்
இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப் படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு. செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

சிறப்புப் படம்

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.


தொகுப்பு

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?


  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமால் பார்த்தசாரதி திருக்கோலத்தில் மீசையுடன் காணப்பெறுகிறார். மேலும் சக்கராயுதம் இன்றியும் காணப்பெறுகிறார்.


தொடர்பானவை

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • வைணவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வைணவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வைணவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வைணவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வைணவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வைணவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
சைவம்சைவம்
சைவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் சைவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணாபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வைணவம்&oldid=3783253" இருந்து மீள்விக்கப்பட்டது