பெரிய நம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியநம்பிகள்
பிறப்புமகாபூர்ணர்
திருவரங்கம்தமிழ்நாடு
இறப்புகாளையார் கோயில்

ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக விசிஷ்டாத்வைத சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவர் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார். இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே.

ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான மாறனேறி நம்பி, தன்னுடைய ஆசிரியருக்கு இருந்த ராஜபிளவை நோயை தனக்கு வாங்கிக் கொண்டார்.[1] அதனால் இறுதிகாலத்தில் யாருமற்ற குடிசையில் மடிந்தார். அவர் தாழ்ந்த குலத்தவர் என்பதால் யாரும் இறுதிக்கடன்களை செய்ய முடியவில்லை. பெரிய நம்பி முன்வந்து மாறநேரி நம்பிக்கு இறுதிக் கடன்களை வைணவ முறைப்படி செய்தார். இதற்காக திருவரங்க வைணவர்கள் அவரை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர்.[1] இதனால் திருவரங்க உற்சவரான நம்பெருமாளிடம் பெரிய நம்பியின் மகள் அத்துழாய் முறையிட்டாள்.[2] நம்பெருமாள் பெரிய நம்பியின் மீது தவறில்லை எனக்கூறியமையால் அங்கிருந்த வைணவர்கள் அதனை ஏற்றனர்.

சீடர்கள்[தொகு]

மற்ற பெயர்கள்[தொகு]

  • மகாபூர்ணர்
  • பராங்குச தாசர்
  • பூராணாச்சாரியார்

சிறப்பு[தொகு]

  • இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, ஆளவந்தார் ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது,
  • மதுராந்தகம் கோதண்டராமர் கோயிலில்(தற்போதைய ஏரிகாத்தராமர் கோயில்)இராமானுசருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தது,
  • ஆள்வந்தாரின் ஆணைப்படி இராமானுசரை திருவரங்கத்திற்கு அழைத்துவந்தது,
  • ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக மடத்தை அலங்கரித்தது,
  • இராமானுசரை கிருமிக்கண்ட சோழனிடமிருந்து காக்கவேண்டி கூரத்தாழ்வானோடு அவைக்கு சென்று தன் கண்களை இழந்தது,
  • தாழ்த்தப்பட்ட குலத்தோராய் கருதப்பட்ட மாறனேரி நம்பிக்கு உயர்க்குடி வழக்கப்படி இறுதிக் கடன் செய்து, இறைமுன் அனைவரும் ஒன்றே எனும் வைணவத்தின் உயர்ந்த கொள்கையை இராமானுசர் மகிழும் வண்ணம் அனைவருக்கும் உணர்த்தியது.

தனியன்[தொகு]

வைணவத்திற்காகவும் , இராமானுசருக்காகவும் தன் கண்களையும் உயிரையும் இழந்த பெரிய நம்பிகள் தன்னுடைய நூற்றைந்தாவது அகவையில் ஜோதிஷ்குடி எனப்படும் காளையார்கோயிலில் தன் ஆச்சாரியன் திருவடி (உயிர்நீத்தல் என்பதின் வைணவச்சொல்)அடைந்தார். அவ்வாச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 86
  2. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 87
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_நம்பி&oldid=3447279" இலிருந்து மீள்விக்கப்பட்டது