கௌடிய வைணவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌடிய வைணவ மரபை நிறுவிய சைதன்யர்
கௌடிய வைணவத்தின் பஞ்ச தத்துவ கடவுள்களின் விக்கிரங்கள், கௌடிய வைணவக் கோயில்: சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர், அத்வைத ஆச்சாரியர், கதாதரர் மற்றும் சீனிவாசன்


கௌடிய வைணவம் (Gaudiya Vaishnavism), சைதன்ய வைணவம்,[1] ஹரே கிருஷ்ணா என்ற பெயர்களில் அழைக்கப்படும் வைணவப் பிரிவை கிழக்கிந்தியாவின், வங்காளம் மற்றும் ஒடிசாவில் நிறுவியர் சைதன்ய மகாபிரபு (பொ.ஊ. 1486–1534) ஆவார். வைஷ்ணவம் என்பற்கு விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடுபவர்கள் என்று பொருள். கௌடிய வைஷ்ணவத்தின் தத்துவங்கள் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டது.

முழு முதற் கடவுளான கிருஷ்ணர் மீது பக்தி செலுத்துவதே, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுதற்கான ஒரே வழி என கௌடிய வைணவத்தின் நம்பிக்கை ஆகும்.[2]

அசிந்திய-பேத-அபேதம்[தொகு]

அசிந்திய-பேத-அபேதம் (Achintya-Bheda-Abheda) எனும் வேதாந்த தத்துவத்தை கௌடிய வைணவம் கொண்டுள்ளது. இத்தத்துவத்தின் படி, பரம்பொருளான கிருஷ்ணர் அல்லது விஷ்ணு, வேறுபட்டவன் என்றோ அல்லது வேறுபடாதவன் என்றோ அறிவது அறிவுக்கு எட்டாதது என்பதே கௌடிய வைணவ மரபின் தத்துவம்.[3][4][5]

ஐந்து தத்துவங்கள்[தொகு]

  • பகவான் கிருஷ்ணரே சைதன்ய மகாபிரபுவாக அவதரித்துள்ளார். அவரே தலைமையானவர். (சுயம் பகவான்)
  • சைதன்யபிரபுவின் முதன்மைச் சீடரான நித்தியானந்தர், பலராமரின் அவதாரமானவர்.
  • அத்வைத ஆச்சாரியர், ஹரி-ஹரனின் அவதாரமாவார்.
  • சைதன்யரின் மற்றொரு சீடரான கதாதரன், ராதை, லலிதா (கோபியர்) ஆகியோரின் அவதாரமாகவும் மற்றும் கிருஷ்ணரின் உள்முக சக்தி கொண்டவரும் ஆவார்.
  • சீனிவாசன் கிருஷ்ணர் மீது தூய பக்தி கொண்ட பக்தர் ஆவார்.[6]

கௌடிய வைணவ அமைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hindu Encounter with Modernity, by Shukavak N. Dasa பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம் "
  2. "Devotional Service Surpasses All Liberation". Nectarofdevotion.com. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
  3. Kaviraja, K.G.. Sri Caitanya-caritamrita. Bengali text, translation, and commentary by AC Bhaktivedanta Swami Prabhupada. Bhaktivedanta Book Trust. Madhya 20.108-109 பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம் "It is the living entity's constitutional position to be an eternal servant of Krishna because he is the marginal energy of Krishna and a manifestation simultaneously one with and different from the Lord, like a molecular particle of sunshine or fire."
  4. Kṛṣṇa Upaniṣad 1.25: ...na bhinnam. nā bhinnamābhirbhinno na vai vibhuḥ
  5. Prabhupada, A.C.Bhaktivedanta Swami (1972). Bhagavad-gita as it is. Bhaktivedanta Book Trust Los Angeles, Calif. https://archive.org/details/bhagavadgitaasit00acbh. 7.8 பரணிடப்பட்டது 2013-07-19 at the வந்தவழி இயந்திரம்
  6. "Adi 1.14". Archived from the original on 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vaishnavism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌடிய_வைணவம்&oldid=3891266" இலிருந்து மீள்விக்கப்பட்டது