உத்கல நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

உத்கல நாடு (Utkala Kingdom) (ஒடியா: ଉତ୍କଳ; தேவநாகரி: उत्कल) மகாபாரதம் குறிப்பிடும், பண்டைய பரத கண்டத்தின் நாடுகளில் ஒன்றாகும். உத்கல நாடு, தற்கால இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை கொண்டிருந்தது. இந்திய தேசிய கீதத்தில் உத்கல நாட்டின் பெயர் உள்ளது.[1][2]

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

தசார்ன நாடு, மேகலா நாடு, (உத்கல நாட்டின் மேற்கு பகுதி நாடு) மற்றும் உத்கல நாடுகள் பற்றிய குறிப்புகள் மகாபாரத்தின் 6-வது பருவத்தின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (மகாபாரதம் 6: 9). உத்கல நாட்டுப் படைகள் குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர்]] அணியை எதிர்த்துப் போரிட்டனர். மேகல நாடு, கலிங்கம், நிசாதர்கள், தாம்ரலிப்தர்கள் மற்றும் உத்கல நாட்டுப் படைகள் நகுலனை கொல்வதற்காக கைகளில் பெரும் ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள் என கர்ண பருவம் அத்தியாயம் 22-இல் குறிப்பிட்டுள்ளது (8:22).

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Utkala, Utkalā: 18 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). 1 August 2015. Archived from the original on August 29, 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2023.
  2. Bharati Pal (April 2007). ""Utkaladesa" in Orissan Inscriptions" (PDF). magazines.odisha.gov.in (in ஆங்கிலம்). pp. 55–57. Archived (PDF) from the original on October 3, 2021. பார்க்கப்பட்ட நாள் 12 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கல_நாடு&oldid=3769102" இலிருந்து மீள்விக்கப்பட்டது