ஏழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஏழாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

ஏழாம் நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை மண்டல வியூகமாக அணிவகுத்தார். பாண்டவர் அணியை தருமர், வச்சிர வியூகமாக அணிவகுத்தார்.

அன்று நடந்த போரில் அநேக முனைகளில் பெரும்மோதல்கள் நடைபெற்றன. கீழ்காணும் வகையில் போர் நடைபெற்றது:
பீஷ்மர் - அருச்சுனன்
துரோணர்விராடன்
அசுவத்தாமன் - சிகண்டி
துரியோதனன்திருட்டத்துயும்னன்
நகுல- சகாதேவர்கள்சல்லியன்
அவந்தி தேச மன்னர்கள் – யுதாமன்யு
பீமன்கிருதவர்மன், சித்திரசேனன், விகர்ணன், துர்மஷன்
கடோற்கஜன்பகதத்தன்
அலம்பசன் – சாத்தியகி
புரிசிரவசு – திருஷ்ட கேது
தருமர் – சுருதாயு
சேகிதானன் – கிருபர்

நாளின் இறுதியில் எல்லோரும் மிகக் களைப்படைந்து காயங்களால் துன்பப்பட்டு பாசறைகள் போய்ச் சேர்ந்தார்கள்.

நிகழ்ந்த முக்கிய மரணங்கள்[தொகு]

போர்க்களத்துக்கு வெளியே நிகழ்ந்த நிகழ்வுகள்[தொகு]

இருதரப்பு வீரர்களும் உடலில் தைத்திருந்த அம்புகளைப் பிடுங்கி, வைத்திய முறைப்படி காயங்களைக் கழுவி இளைப்பாறினார்கள். எல்லோரும் இசை வாத்தியங்களைக் கேட்டுக் கொண்டு உல்லாசமாக பொழுது போக்கினார்கள். அத்தருணத்தில் போர் குறித்து வார்த்தை ஒன்றும் பேசாமல் கழிக்கப்பட்டது என்கிறார் வியாசர்.

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.