உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தி, தட்சகன் முதலான நாகர்களை காத்த ஆஸ்திகர்
அரக்கு மாளிகை தீக்கிரையாதல்


மகாபாரதம் புத்தகம் 1 ஆதி பருவம் (புத்தகத்தின் ஆரம்ப பருவம்) இந்த புத்தகத்தில், நைமிசாரண்ய வனத்தில் உக்கிரசிரவஸ் அல்லது சௌதி என்ற சூத முனிவரால் மகாபாரதம் எப்படி உரைக்கப்பட்டது என்பது சொல்லப்படுகிறது. ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம், வைசம்பாயானரால் உரைக்கப்பட்ட மகாபாரதத்தை சௌதி எனும் உக்கிரசிரவஸ் கேட்டு, அதனை நைமிசாரண்யத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சௌனகர் முதலான முனிவர்களுக்கு அதைத் திரும்ப உரைத்தார். இந்த பருவத்தில் குரு பரம்பரையின் தோற்றம், பாண்டவர், கௌரவர் பிறப்பு, அரக்கு மாளிகை எரிப்பு, இடும்பன் மற்றும் பகாசூரனை பீமன் வதைத்தல், திரௌபதி சுயம்வரம், காண்டவ வனத்தை எரித்து இந்திரப்பிரஸ்தம் நகரத்தை நிறுவியது குறித்து சொல்லப்படுகிறது.[1]

உப பருவங்கள்

[தொகு]

மொத்தம் 19 உப பருவங்களைக் கொண்டது ஆதி பருவம். அதில் 100 உள் உப பருவங்கள் உள்ளன. உப பருவங்களின் பட்டியல் பின் வருமாறு:

1. அனுக்ரமானிகா பருவம் - மன்னன் திருதராஷ்டிரனால் சஞ்சயனுக்கு ஒப்பாரியாகச் சொல்லப்பட்ட மகாபாரதச் சுருக்கம்.
2. பௌசிய பருவம்
3. பௌலோம பருவம்
4. ஆஸ்திக பருவம்
5. ஆதிவம்சவதரனா பருவம்
6. சம்பவ பருவம்
7. ஜடகிருஹா பருவம்
8. இடும்பன் வதை பருவம்
9. பகாசூரன் வதை பருவம்
10. சைத்ரரத பருவம்
11. திரௌபதி சுவயம்வர பருவம்
12. திரௌபதி விவாக பருவம்
13. விதுரகாமன பருவம்
14. ராஜ்யலாப பருவம்
15. அர்ஜூன வனவாச பருவம்
16. சுபத்ராஹரண பருவம்
17. ஹரன ஹரிகா பருவம்
18. காண்டவ பருவம்

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_பருவம்&oldid=4254887" இலிருந்து மீள்விக்கப்பட்டது