குருதேசம்
குரு இராச்சியம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். கி. மு. 1200–அண். கி. மு. 500 | |||||||||||||
![]() | |||||||||||||
தலைநகரம் | அசந்திவதம், பின்னர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | வேத மொழி | ||||||||||||
சமயம் | பண்டைய வேத சமயம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
இராஜா | |||||||||||||
• கி. மு. 12ஆம்–9ஆம் நூற்றாண்டுகள் | பரிட்சித்து | ||||||||||||
• கி. மு. 12ஆம்–9ஆம் நூற்றாண்டுகள் | சனமேசயன் | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||||||
• தொடக்கம் | அண். கி. மு. 1200 | ||||||||||||
• முடிவு | அண். கி. மு. 500 | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
குரு தேசம் இமயமலையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் யமுனை நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு வடக்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தெற்கிலும், பாஞ்சலத்திற்கு மேற்கிலும் பரவி இருந்த தேசம்.[1] இதன் தலைநகரம் அஸ்தினாபுரம் ஆகும். குருச்சேத்திரப் போரின் முடிவில் பாண்டவர்கள், கௌரவர்களை வென்று குரு நாட்டை ஆண்டனர்.
அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் குரு நாடும் ஒன்றாகும்.
இருப்பிடம்[தொகு]
இந்த குருதேசத்தின் பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் யமுனா நதியின் அருகில் உள்ள பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]
பருவ நிலை[தொகு]
இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.
மலை, காடு, மிருகங்கள்[தொகு]
இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், பசுக்களும், வெண்மையான குதிரைகளும் ஏராளமாய் இருக்கும்.
நதிகள்[தொகு]
இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் மிக ஆழமானதும், கருமையான நிறமுடைய நீர் நிறைந்து ஓடுகிற ஜீவ நதியான யமுனையும், இத்தேசத்தின் மேற்கிலிருந்து நீல நிறமுடைய நீர் நிறைந்து ஓடும் நீலா நதியும் முக்கியமானவை.
விளைபொருள்[தொகு]
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
நகரம்[தொகு]
அத்தினாபுரம் இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்தில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், இருந்துள்ளன.
இதனையும் காண்க[தொகு]
கருவி நூல்[தொகு]
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009