ஜரத்காரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாககன்னியான ஜரத்காரு எனும் மானசா தேவியின் மடியில் ஆஸ்திகர்


ஜரத்காரு (Jaratkaru), இந்து தொன்மவியலின்படி, முனிவரான இவர், தன் பெயரைக் கொண்ட வாசுகியின் தங்கையான நாககன்னி ஜரத்காருவை, தன் முன்னோர்களின் வேண்டுதலின்படி மணந்தவர்.[1] ஜரத்காரு முனிவருக்கும் நாககன்னியான ஜரத்காருக்கும் பிறந்தவரே ஆஸ்திகர்.

தன் தாயின் (நாககன்னி ஜரத்காரு), சகோதர்களான நாகர்களை குறிப்பாக தட்சகனை, ஜனமேஜயன் நடத்திய வேள்வித்தீயில் வீழ்ந்து இறப்பதிலிருந்து ஆஸ்திகர் காத்தருளினார். ஜரத்காருவைப் பற்றிய குறிப்புகள் புராணங்கள் மற்றும் மகாபாரதம் ஆதி பருவத்தில் காணப்படுகிறது.[2]

அரித்துவார் அருகே உள்ள சிறு மலை மீது நாக்கன்னி ஜரத்காருவை மானசா தேவி என்ற பெயரில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்[3][4]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜரத்காரு&oldid=3725121" இலிருந்து மீள்விக்கப்பட்டது